ஈரோடு மாவட்டம், கோபி தினசரி சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு சந்தை வியாபாரிகள் சங்க சார்பில், 50க்கும் மேற்பட்ட இருக்கைகள் சனியன்று வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், நகராட்சி ஆணையர் சுபாஷினி, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.