சேலம், அக்.1- சேலம் அரசு மோகன் குமா ரமங்கலம் மருத்துவக்கல் லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் பல நாட்க ளாக கிடக்கும் சடலத்தை உட னடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக் கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்கள் படுக்கைக்கு அருகிலேயே சடலம் ஒன்றை போட்டு சென்ற மருத்துவமனை ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அருகிலிருக்கும் நோயாளிகள், சடலத்தை நாங்கள் இருக்கும் இடத்தின் அரு கிலேயே ஏன் இப்படி போட்டு செல்கிறீர்கள், என கேட்டதற்கு, நாங்கள் பிறகு தான் வந்து எடுப்போம் என அலட்சியமாக பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர் உடல் அழுகிய நிலையில், புழுக்கள் உருவாகி உள்ளதால், நோய் தொற்று ஏற் படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனை நோயாளிகள் மற்றும் நோயாளிகளை காண வரும் பார்வை யாளர்கள், அந்த அறைக்குள் செல்லும்போது முகத்தை மூடிக் கொண்டு சென்று வருகின்றனர். இருப்பினும் இதுவரை மருத்துவமனை நிர்வாகிகள் பிரச்சனைக்கு தீர்வு காணா மல் விரட்டியடிக்கும் சம்பவம் நடந்து வருவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.