districts

img

பழங்குடியின மக்களுக்கு இனச்சான்று கோட்டை முற்றுகைக்கு அறைகூவல்

சேலம், ஜன.7- பழங்குடியின பட்டியலில் உள்ள 36 இனங்களுக்கு, இன சான்று வழங்க வேண்டும் என தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின்  மாநில குழுவில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்று கைக்கு மாநிலக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் சேலம் சிறை தியாகிகள் நினை வகத்தில் சங்கத்தின் மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லி பாபு தலை மையில் நடைபெற்றது. இதில், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சரவணன், மாநில பொருளாளர் பொன்னுசாமி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.சண்முகம் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். இதில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் இனத்தை பழங் குடியின பட்டியலில் இணைத் தற்கு வரவேற்பு தெரிவிக்கப் பட்டது. மேலும், தமிழக அரசு  உடனடியாக இதனை நடைமுறைப் படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வன நிலங் களில் பழங்குடியின மக்கள் அனு பவித்து வரும் அனுபவ நிலங்களை  காப்புக் காடுகளாக அறிவிக்கக் கூடாது. மேலும், அங்கு கனிம வளங்கள் உள்ளிட்ட எந்த வேலை யையும் நடத்த அரசு அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதி தந்தால் அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. பழங்குடியின பட்டியலில் உள்ள 36 இனங்களுக்கும் இன சான்று வழங்க வேண்டும். குறிப் பாக, பத்திரங்கள் கூட கேட்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. மனுக்களை ஆன்லை னில் பதிவு செய்வதை ரத்து செய்து விட்டு நேரடியாக மனுக்களை பெற  வேண்டும் எனவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. வன உரிமை சட்டத்தை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.