districts

img

1100 ஆண்டுகள் பழமையான கோயிலில் 9 புதிய கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு

அழகுமலை ஊராட்சிமன்றத் தலைவர் ர.தூயமணி மற்றும் கோவில் தர்மகர்த்தா கு. ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருப்பூர் வீரரா சேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார் மற்றும் க.பொன்னுச்சாமி ஆகி யோர் இங்கு ஆய்வு மேற்கொண் டனர். இந்த ஆய்வின்போது புதி யதாக ஒரு வட்டெழுத்து மற்றும் எட்டு தமிழ் கல்வெட்டுகளை கண் டுபிடித்தனர். இதைப்பற்றி ஆய்வு  மையத்தின் இயக்குனர் பொறியா ளர் சு.ரவிக்குமார் கூறியதாவது: தமிழகத்தைப் பொறுத்தவரையில் கிபி 5 ஆம் நூற்றாண்டு முதல் குடைவரைக் கோயில்களும், கிபி  7 ஆம் நூற்றாண்டு முதல் ஒற் றைக் கற்கோயில்களும், கிபி 8  ஆம் நூற்றாண்டு முதல் கற்றளி கள் எனப்படும் கட்டுமானக் கோயில்களும் கட்டப்பெற்றன. கொங்கு மண்டலத்தில் கிபி 9  ஆம் நூற்றாண்டில்தான் முதன்முத லாக கற்றளிகள் அமைக்கப்பட் டன. இத்தகைய கற்றளிகள் கோயில்பாளையம் மற்றும்  கோயில்பாளையம் புதூரில் தற் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடக்க காலக் கற்றளிக ளில் ஒன்றாகவும், மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் அந்த கற்றளியின் பெயரிலேயே தளிகீஸ்வரர் கோயில் என்ற பெயரில் உள்ளது. அவிநாசி முதல் அவிநாசிபா ளையம் வரையிலுள்ள பெருவழி யில் திருப்பூரில் இருந்து தென்கி ழக்காக 14ஆவது கிலோ மீட்டரி லும், மேற்கு கடற்கரை நகரமான முசிறியில் இருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக வெள்ளலூர், சூலூர், காங்கேயம், கரூர் வழி யாக பூம்புகார் வரை சென்ற  பண்டைய கொங்குப் பெருவெளி யில் அமைந்துள்ள கிராமம்தான் கோயில்பாளையம்.  இங்குள்ள தளிகீஸ்வரர் கோயி லில் இக்கிராமத்தைச் சேர்ந்த து. லோகேஸ் உடன் மேற்கொண்ட ஆய்வில் கொங்கு மண்டல வர லாற்றுக்குப் புதிய வெளிச்சம் வழங்கும் வகையில் ஒன்பது புதிய கல்வெட்டுகளை கண்டு பிடித்துள்ளோம். 1100 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டு: வட்டெழுத்து என்பது இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்களுக்கு முன்பு கிபி 5 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 11 ஆம் நூற்றாண்டு வரை  இங்கு வழக்கில் இருந்த தமிழ் எழுத்து வடிவம் ஆகும். இங்கு தளிகீஸ்வரர் கோயிலின் அர்த்த மண்டப முன்பக்க வலது சுவரில்  12 வரிகள் கொண்ட வட்டெழுத் துக்களை இந்திய வரலாற்று பேராசிரியர் முனைவர் எ.சுப்பரா யலு வாசித்துள்ளார். இக்கல் வெட்டு கிபி 9 ஆம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தின் மத்தியப் பகுதிகளை ஆட்சி செய்த இடைக் கால சேரர் மரபில் வந்த கோக் கண்ட வீரநாராயணன் கல்வெட்டு என்றும், இதில் ஸ்வஸ்திஸ்ரீ கோக் கண்டன் வீரநாரணற்குச் செல்லா நின்ற வாண்ட....பனணவ.....கீருடப்பாழ என வருகிறது, என்று கூறியுள்ளார். இக்கல்வெட்டு மூலம் தன்னால் எடுப்பிக்கப்பட்ட திருக்கோயிலுக்கு சேதம் ஏற்படுத் துபவர்களின் சந்ததி பாழ்படும் என்பது பொருள். தமிழ் கல்வெட்டு இங்குள்ள மற்ற 8 கல்வெட்டு களும் தமிழ் கல்வெட்டுகள் ஆகும். கொங்கு சோழ மாமன் னன் வீரராசேந்திரன் (1207- 1256)  காலத்துக் கல்வெட்டு காலத்தால் முற்பட்டது. அதற்கு அடுத்த நிலையில் அவருடைய பேரன் விக்கிரம சோழன் (கிபி 1273 -1305) காலத்தைச் சேர்ந்த கல் வெட்டுகள்தான் அதிகம் காணப்ப டுகிறது.  ஒரு பெண் கோயிலில் நந்தா விளக்கு எரிப்பதற்கு கோயில் கருவூலமான பண்டாரத்துக்கு பலஞ்சலாகை அச்சு காசு கோயில்  கவிசிய கோத்திரச் சிவபிராமணி ரிடம் கொடுத்தது போன்ற செய்தியை அறிய முடிகிறது. எழுத்துக்கள் பொரிந்துள்ளதால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை. சமுதாயத்தின் நிர்வாக அமைப்பு பண்டைய தமிழ்நாட்டில் கோயில்கள் வழிபாட்டு மையங்க ளாகவும், மக்கள் சமுதாயத்தின் நிர்வாக அமைப்பாகவும் திகழ்ந் தன. கோயில்களில் தான் பண் டைய கருவூலம், ஆவணக்களஞ்சி யம், கல்வி மற்றும் மருத்துவச் சாலைகள், தானியக் கிடங்கு, அன்னசத்திரம், ஆயுத மற்றும்  பயிற்சிக்கூடங்கள் என சமுதாயத் தின் உள்கட்டமைப்பாகவும் திகழ்ந் துள்ளன என்பதை கல்வெட்டுகள் காட்டுகின்றன.   மேலும் இக்கோயில் அருகில் 1000 ஆண்டுகள் பழமையான பண்டைய வணிகர்கள் வழிபட்ட அய்யனார் சிற்பம் உள்ளது. அதே போல் இவ்வூரில் கல்வட்டத்துடன் கூடிய பண்டைய பெருங்கற்காலச் சின்னங்களும், அலை கோடுகளு டன் கூடிய ஒடுகளும், தாங்கிக ளும், இரும்பு கசடுகளும் காணப் படுவதால் இக்கிராமங்களில் தொடர்ந்து 2500 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து கால்நடை வளர்ப்புடன், வேளாண்மை செய் துவந்ததை அறிய முடிகிறது.