இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள 5 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தர உறுதி சான்றிதழ் பெற்றுள்ளன. இதில் திருப்பூர் மாவட்டம், தளவாய்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலை யத்தின் ஆய்வகத்திற்கும் தேசிய தர உறுதி சான்றிதழ் கிடைத் துள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்திடம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார், வட்டார மருத்துவ அலு வலர் தேன்மொழி, மருத்துவ அலுவலர் ரியாஸ் சுல்தானா, ஆய் வக தொழில்நுட்ப வல்லுநர் ஜி.சுகுணா ஆகியோர் சான்றிதழை காட்டி பாராட்டுப் பெற்றனர்.