திருப்பூர், பிப்.15- 43 ஆவது தேசிய முதியோர் தடகள சேம்பியன் சிப் போட்டியில் 16 தங்கம், 19 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என 43 பதக்கங்களை வெற்று திருப்பூரை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்னைகள் சாதனை படைத்துள்ளனர். 43 ஆவது தேசிய முதியோர் தடகள சேம்பியன் சிப் போட்டி தமிழ்நாட்டி யில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நடை பெற்றது. 22 மாநிலங்களை சேர்ந்த சுமார் 1800 வீரர் மற்றும் வீராங்னை கள் கலந்து கொண்டார்கள். அதில் தமிழ்நாடுக்காக திருப்பூர் மாவட்டத் தில் முதியோர் திருப்பூர் குழுவை சார்ந்த 16 வீரர் மற்றும் வீராங்னை கள் கலந்து கொண்டார்கள். மேலும், முதியோர் திருப்பூர் குழுவை சார்ந்த 16 வீரர் மற்றும் வீராங்னைகள் 16 தங்கம், 19 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என 43 பதக்கங்களை வெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற முதியோர் திருப்பூர் குழுவை சார்ந்த வீரர் மற்றும் வீராங் னைகள் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில், முதியோர் திருப் பூர் குழுவின் செயலாளர் சுமதி, பொருளாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.