தருமபுரி, ஆக.19- கட்டப்பஞ்சாயத்து கும்பல் மீது நடவடிக்கை எடுக்கா ததை கண்டித்து, ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த 4 குடும்பங்க ளைச் சேர்ந்தவர்கள், ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க ஆட்சியர் அலுவலத்திற்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி ஒன்றியம், சின்னக்குப்பூர் கிராமத்தைக் சேர்ந்த வர் அப்பாமணி. அதேகிராமத்தைச் சேர்ந்த பச்சியம்மாள் என்பவரிடம் அப்பாமணி பணம் பெற்றுள்ளார். பெற்ற பணத்திற்கு வட்டியும், அசலும் கொடுத்துவிட்டார். இந்நிலையில், பணம் கொடுக்கவில்லை எனக்கூறி பச்சியம்மாள், அப்பாமணியின் பூர்வக நிலத்தை எழுதி கொடுக்க சொல்லி ஊர் பஞ்சாயத்து மூலம் நெருக்கடி கொடுத் துள்ளார். “நாங்கள் வாங்கிய பணத்தை செலுத்திவிட் டோம். அதனால் நிலத்தை தரமுடியாது” எனக்கூற, அப்பா மணி மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த உறவினர் குடும் பம் என 4 குடும்பத்தாரை ஊரைவிட்டு பஞ்சாயத்தார் ஒதுக்கி வைத்தனர். மேலும், ஒதுக்கி வைத்த குடும்பத்தினர் கோவி லுக்கு செல்லக்கூடாது. பொதுவழியைப் பயன்படுத்தக் கூடாது. ஒதுக்கிவைத்த குடும்பத்துடன் பேசினால் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பஞ்சாயத்தார் ஊர்கட் டுப்பாடு போட்டுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி நகர காவல் நிலை யத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகாரளித்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் அவர்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு திங்களன்று வந்திருந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.