விருதுநகர், ஜூலை 15- கள்ளச்சாராயத்திற்கு எதிரான போராட்டத்தில் இன்னுயிர் நீத்த விருதுநகர் தியாகி பி.ஜே.சந்துரு வின் 33 ஆம் ஆண்டு நினைவு தினம் மாவட்டம் முழுவதும் அனுஷ்டிக் கப்பட்டது. விருதுநகர் பாத்திமாநகரில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் பொன்பாண்டி தலைமையேற்றார். சத்யா முன்னிலை வகித்தார். சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர் கே.ஜெயக் குமார் வெண்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் எம். ஜெயபாரத் சிறப்புரையாற்றினார். மேலும் இதில், சத்தியஜித், ஆண்ட்ரூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். காந்திபுரம் தெருவில் நடை பெற்ற போதைக்கு எதிரான உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு சரத் தலை மையேற்றார். பி முன்னிலை வகித் தார். நகர் செயலாளர் தீபக் குமார் விளக்கிப் பேசினார். மேலும் இதில் எஸ்.டி.மணிகண்டன், முனீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். பாண்டியன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் நகர செய லாளர் பி.கருப்பசாமி தலைமை யேற்றார். ஆலமரம் அமைப்பின் அமைப்பாளர் புஷ்பராஜ் விளக்கிப் பேசினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.