சேலம், அக்.17- பள்ளி மாணவியை பாலியல் வன் கொடுமை செய்த வழக்கில், கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கிச்சிப்பாளை யம் பகுதியைச் சேர்ந்த வீரமணி (22) என்பவர், 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி வீட்டிலிருந்தவர்களிடம் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி விட்டு வெளியில் சென்றார். அப் போது அந்த மாணவியை, வீரமணி தனது இருசக்கர வாகனத்தில் கொல் லிமலைக்கு சுற்றுலா அழைத்து சென் றார். அவருடன் மற்றொரு இருசக் கர வாகனத்தில் வீரமணியின் நண்பர் களான கல்லூரி மாணவர்கள் கவியர சன் (20), அக்பர் (20) ஆகியோரும் சென்றனர். இதன்பின் கொல்லி மலையில் உள்ள ஒரு தங்கும் விடுதி யில் அறை எடுத்து அந்த மாணவியு டன் வீரமணி தங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த மாணவியை வீட் டில் இறக்கி விட்டு சென்றார். இதனை யறிந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது, வீரமணி தன்னை கொல்லிமலைக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வ தாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சேலம் நகர காவல் நிலை யத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய காவல் ஆய்வா ளர் கலைவாணி, மாணவியை பாலி யல் வன்கொடுமை செய்த வீரமணி மற்றும் உடந்தையாக இருந்த கவிய ரசன், அக்பர் ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்ப திவு செய்து கைது செய்தார். தொடர்ந்து 3 பேரையும் நீதிபதி முன்பு நேர்நிறுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.