ஈரோடு, ஆக.4- ஈரோடு புத்தகத் திருவிழாவில், மாணாக்கர்கள் எழுதிய 3 நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு அரசு, மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு புத்தகத் திருவிழா - 2024, சிக்கய்ய நாயக்கர் கல் லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்புத்தகத் திரு விழாவையொட்டி, புத்தகத் திருவிழா வளாகத்தில் அமைக் கப்பட்டுள்ள நூல் வெளியீட்டு அரங்கில், இரண்டு மாணவர் கள் மற்றும் ஒரு மாணவி எழுதிய 3 நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. இம்மூன்று நூல்களை யும் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குண சேகரன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதி தலைமை வகித்தார். தூத்துக்குடி குமிழ்முனை பதிப்பகத் தின் புத்தகப் பதிப்பாளர் ஜே.சைமன் முன்னிலை வகித்தார். மாணவர் மகே.கெளதம் எழுதிய ‘காவிரியின் மை’ என்ற சிறுகதை தொகுப்பு நூலின் முதல் பிரதியை வரலாற்று ஆசிரி யர் அ.இளங்கோவனும், சி.பூமிகா என்ற மாணவி எழுதிய ‘புரி யாத பிரியம்’ என்ற நாவலின் முதல் பிரதியை கொல்லம்பா ளையம் நூலகர் கலைச்செல்வியும், செ.முகிலன் என்ற மாண வர் எழுதிய ‘கிறுக்கல்கள்’ எனும் கவிதைத் தொகுப்பு நூலின் முதல் பிரதியை வரலாற்று பேராசிரியர் ஆ.குருசாமியும் பெற் றுக் கொண்டனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.