கோவை, செப்.1- சூலூர் அருகே உள்ள மோப் பிரிபாளையம் பேரூராட்சியில், சாலையோர பகுதிகளில் ஒரே நேரத்தில் 3,200 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த மோப்பிரிபாளையம் பேரூ ராட்சியை பசுமையாக்கும் நோக் கில் பல்வேறு தன்னார்வ அமைப்பு களுடன் கைகோர்த்துள்ள பேரூ ராட்சி நிர்வாகம், பசுமை வளங் களை அமைத்து பராமரிக்கும் நட வடிக்கைகளை முன்னெடுத்து வரு கிறது. அதன்ஒருபகுதியாக பேரூ ராட்சிக்குட்பட்ட சாலையோர பகுதி களில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க திட்டமிடப்பட் டுள்ளது. அதன்படி தனியார் நிறு வனத்தின் நிதியுதவியுடன் 3,200 மரங்கள் ஒரே நேரத்தில் நடவு செய் யும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில், பெற் றோருடன் வந்து கலந்து கொண்ட பள்ளிக் குழந்தைகள் ஆர்வத்துடன் மரங்களை நடவு செய்தனர். இதுகுறித்து மோப்பிரிபாளை யம் பேரூராட்சித் தலைவர் சசி குமார் செய்தியாளர்களிடம் பேசு கையில், பேரூராட்சிக்குட்பட்ட 57 கிலோ மீட்டர் சாலைகளின் இரு புறமும் 3,200 மரக்கன்றுகளை நடவு செய்கிறோம். இதற்காக லட் சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத் திடம் இருந்து சுமார் ரூ.12 லட்சம் சி.எஸ்.ஆர் நிதி பெற்றுள்ளோம். பேரூராட்சிப் பகுதிகளை பசுமை யாக்கும் நோக்கில் ஏற்கனவே 5 வனங்களை அமைத்து பராம ரித்து வருகிறோம். தற்போது, சாலையோரங்களில் மரம் நட்டு பரா மரிப்பது மூலம் பசுமை நிறைந்த பேரூராட்சியாக மோப்பிரிபாளை யம் பேரூராட்சி திகழும் என்று நம்பிக்கை உள்ளது. சாலையோ ரங்களில் நடவு செய்யும் மரங் களை லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றி பராமரிக்க இருக்கிறோம். இப்பணிகளை மேற்கொள்ள பேரூராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகள் பெரிதும் உதவி வருகின்றனர். குழந்தைகள் இந்த நிகழ்வில் பங் கேற்று மரங்களை நடவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே குழந்தைகளை இது போன்ற நிகழ்வுகளில் பங்கெடுக்க வைத்தால் மட்டுமே மரங்களை நட்டு பராமரிப்பதில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் என தெரிவித் தார்.