districts

இந்து இளைஞர் முன்னணி நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு இந்து முன்னணி நிர்வாகி உட்பட 2 பேர் கைது

கோவை, செப்.28- இந்து இளைஞர் முன்னணியின் நிர்வாகியின் கார் கண்ணாடி உடைத்து சமூக பதட்டத்தை ஏற்படுத்திய வழக் கில் இந்து முன்னணியின் நிர்வாகி இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கோவை மேட்டுப்பாளையம் காம ராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் வேல் முருகன். இவரது மகன் ஹரிஷ் (21). இவர் மேட்டுப்பாளையத்தில் இந்து  இளைஞர் முன்னணி நகர பொறுப் பாளராக உள்ளார். இந்நிலையில் செவ்வாயன்று இவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன் பக்க கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர். இதுகுறித்து மேட் டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பத்திரி நாராயணன் விசா ரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து உள்ள சிசிடிவி கண்கா ணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி  காவல் துறையினர், குற்றவாளி களை தேடி வந்தனர். இந்து முன்னணி நிர்வாகிகள் காரை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி தொடர்ந்து காவல் துறையினரை நிர்பந்தப்படுத்தி வந் தனர்.

இந்து அமைப்பு நிர்வாகியின் காரை சேதப்படுத்திய சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது. இந்நிலை யில் போலிசாரின் தீவிர விசார ணைக்கு பின்னர் இருவர் கைது செய் யப்பட்டனர். இதுகுறித்து கோவை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாரா யணன் செய்தியாளர்களிடம் கூறுகை யில், மேட்டுப்பாளையம் மகாதேவ புரம் பகுதியில் இந்து இளைஞர்  முன் னணியை சேர்ந்த ஹரீஷ் என்பவரின் கார் தாக்கப்பட்ட வழக்கு சம்மந்த மாக அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி தமிழ்ச்செல்வன் (24), அவரது நண்பர் ஹரிஹரன் (25)  ஆகிய இருவரை கைது செய்துள் ளோம்.விநாயகர் சதுர்த்தியின் போது முன் விரோதம் ஏற்பட்டதன் காரண மாக இந்த தாக்குதல் நடத்தப்பட் டுள்ளது. சிசிடிவி கேமரா பதிவுகள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மேட்டுப்பாளையத்தில் 2 பிளைவுட் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில்  கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய் யப்படுவார்கள். அதற்கான விசார ணையை துரிதபடுத்தியுள்ளோம் என் றார்.  இந்துத்துவ அமைப்பின் நிர் வாகி வீட்டில் இந்து முன்னணி நிர்வாகி ஒருவரே திட்டமிட்டு காரை சேதப் படுத்தி வேறு ஒரு சமூகத்தின் மீது  திசை திருப்பும் நடவடிக்கை மேண் கொண்டது வெளிச்சத்திற்கு வந்துள் ளது.

;