districts

img

150 ஆவது ஆண்டு உதகை அரசு மருத்துவமனை சாலை வசதி சரியாக இல்லாததால் நோயாளிகள் அவதி

உதகை அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலை வசதி சரியாக இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  நீலகிரி மாவட்டம், உதகை மேல் பஜார் பகுதியில் உள்ள அரசு  மருத்துவமனை 1867 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் போரில்  பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தோற்றுவிக்கப் பட்டது. நீலகிரி மாவட்டத்தில் முதல்  முதலில் இந்த மருத்துவமனை தான்  தொடங்கப்பட்டது. இதன்பின் 1926  ஆம் ஆண்டு அரசு வசம் ஆனது.  சமீபத்தில் உதகை அரசு மருத்துவ மனையின் 150 ஆவது ஆண்டு  விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. இம்மருத்துவமனையில் பொது மருத்துவம், டயாலிசிஸ், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, காது, மூக்கு மற்றும் தொண்டை, மனநல மருத்துவப் பிரிவு, கண்  சிகிச்சைப் பிரிவு, ரத்தப் பரி சோதனைப் பிரிவு, எம்.ஆர்.ஐ, சி.டி  ஸ்கேனிங் உட்பட பல பிரிவு களில் பொதுமக்களுக்கு சிகிச்சை யளிக்கப்படுகின்றன. அதேபோல, மாவட்டத்தில் 5 தாலுகா அரசு தலைமை மருத்துவமனைகளும், 2 மருந்தகங்களும் செயல்பட்டு வரு கின்றன. உதகை அரசு மருத்துவ மனையில் புறநோயாளிகளாக ஒரு  நாளைக்கு 450 பேரும், உள் நோயாளிகளாக 300 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வளவு பாரம்பரியமும், அத்தியாவசிய தேவையும் வாய்ந்த  உதகை அரசு மருத்துவமனை வளா கத்தில் சாலைகள் குண்டும், குழியு மாக கற்களுடன் காணப்படு கின்றன. மேலும்  பல்வேறு அடிப் படை வசதிகளும் மேம்படுத்தப் படாமல் உள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்படு கின்றனர். இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் கூறுகையில், 

எள்ளநல்லி ரவி

உதகை அரசு மருத்துவ மனையில் சமீபத்தில் எனது உறவி னரை சிகிச்சைக்காக சேர்த்து இருந்தோம். அப்போது சிகிச்சை பெரும் அறையிலிருந்து எக்ஸ்ரே, ஸ்கேன் எடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்காக அரசு மருத்துவ மனைக்கு சொந்தமான ஸ்ட்ரக்சர்  மற்றும் சக்கர நாற்காலியில் நோயாளியை கூட்டி செல் கின்றனர். ஆனால், அவ்வாறு ஸ்ட்ரக்சர் மற்றும் நாற்காலியில் கொண்டு செல்லும்போது சாலை  குண்டும், குழியுமாக கற்கள் நிறைந்து கரடு, முரடாக காணப்படு வதால் நோயாளிகள் சிரமப்படு கின்றனர். குறிப்பாக வாகன விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக அரசு  மருத்துவமனைக்கு வருபவர்கள் அங்கிருந்து எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்க ஸ்ட்ரக்சர் அல்லது  சக்கர நாற்காலியில் கீழ்தளத்திற்கு வருகின்றனர்.  ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் அவதிப்படும் அவர்கள் இந்த குண்டும், குழியு மான சாலை வழியாக வரும் போது கூடுதல் வலியால் அவதிப் படுகின்றனர். மேலும் எலும்பு முறிவு  பாதிப்பு அதிகமாகிறது. ஊட்டி யின் மையப்பகுதியில் உள்ள ஏழைகள் புகலிடம் வாய்ந்த இந்த  அரசு மருத்துவமனையில் சாலை  வசதிகளை சரி செய்து அடிப்படை  வசதிகளை மேம்படுத்த வேண்டும்,  என்றார்.

சதீஷ், தங்காடு

தமிழகத்தில் உள்ள பல்வேறு  இடங்களில் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏதாவது ஒரு இடத் தில் சாலை மோசமாக இருக்கும். எனவே அந்த இடத்தில் வரும் போது நோயாளிகளை கவன முடன் அழைத்துச் செல்வார்கள். ஆனால் உதகை அரசு மருத்துவ மனை முழுவதும் சாலை படு மோசமாக காட்சி அளிக்கிறது. இதனால் நோயாளிகளை ஸ்ட்ரக்சர்  மற்றும் சர்க்கரை நாற்காலியில் அழைத்து செல்லும்போது நோயா ளிகள் வலியால் அவதிப்படுவதால் அவரது உறவினர்கள் ஸ்ட்ரக்சரை  இழுத்துச் செல்லும் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் தேவையில்லாத பிரச்ச னைகள் ஏற்படுகிறது. மேலும் அரசு  மருத்துவமனை சுற்றுச்சுவர் உடைந்து கிடப்பதால் கால் நடைகள் மருத்துவமனை வளா கத்தில் சுற்றி திரிகின்றன. எனவே, அரசு மருத்துவமனையில் அடிப் படை வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

ரூ.5 கோடி ஒதுக்கீடு

இதுகுறித்து அரசு மருத்துவ மனை முதல்வர் மனோகரி கூறுகை யில், உதகை அரசு மருத்துவ மனையில் சுகாதாரமாக மேற் கொள்ள பல்வேறு நடவடிக்கை கள் தீவிரமாக எடுக்கப்பட்டு வரு கிறது. சமீபத்தில் ரூ.5 லட்சம் நிதி  ஒதுக்கப்பட்டு பொதுப்பணி துறை  மூலம் மருத்துவமனை வளா கத்தில் கால்வாய்கள் சரி செய்யப் பட்டது. கடந்த ஆண்டு மகப்பேறு கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், உணவு சமைக்கும் அறையையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. மேலும் 6 மாதத்திற்குள் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடம் முழுமையாக தயாராகிவிடும் என்ப தால் ஒருவேளை அரசு மருத்துவ மனை அங்கு மாற்றப்படலாம். மேலும் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தேவைப்படும் வசதிகள் செய்யப்படும். இவ் வாறு அவர் கூறினார்.