ஈரோடு, ஜூலை 21- அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் அறி வித்த போராட்ட நடவடிக்கையின் விளைவாக, கவுந்தப் பாடி ஊராட்சி நிர்வாகம் நூறு நாள் வேலை கொடுப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாவட்டப் பொருளாளரும், பவானி தாலுகா செயலாரு மான எஸ்.மாணிக்கம் கூறியதாவது, ஏ.எம்.நடராஜன், கே.ஆர்.சண்முகம் ஆகியோருடன் 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் கவுந்தப்பாடி ஊராட்சி செயலாளரை நேரில் சந்தித்து வேலை கேட்கப் பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் மனு அனுப்பப் பட்டது. கடந்த மூன்று மாத காலமாக வேலை இல்லாமல் சிரமப்படும் தொழிலாளர்கள் வேலை கேட்டு 280 க்கு மேற்பட்ட வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு 2024 ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்து, அதற்கான ஒப்புகைச் சீட்டும் பெற்றுள்ளனர். இந்நிலையில் ஒப்புகை சீட்டு பெற்ற அனைவருக்கும் 2024 ஜுலை15ஆம் தேதி முதல் வேலை வழங்கப்படவில்லை. எனவே, கவுந்தப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் 100 நாள் வேலை அட்டையுடன் கலந்து கொண்டு, வேலை கிடைக்கும் வரை அங்கே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தெரிவிக்கப்பட்டது. அதற்கான தயாரிப்புகளும் மேற்கொள் ளப்பட்ட நிலையில், தன்னாசிப்பட்டி பகுதி விவசாய தொழி லாளர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்பட்டது. இதனை யடுத்து அப்பகுதி மக்கள் சங்கத்தின் முயற்சியால் பவானி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர், கவுந்தப்பாடி ஊராட்சி நிர்வாகத்திற்கும் நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித் துள்ளனர் எனக் கூறினார்.