தார்ச்சாலை வசதி கேட்டு மனு
தருமபுரி, ஆக.13- நல்லம்பள்ளி அருகே உள்ள சந்தாரப்பட்டி போயர் கொட்டாய்க்கு செல்லும் மண் சாலையை, தார்ச்சாலை யாக மாற்றித்தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் செவ்வாயன்று தருமபுரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், எர்ரபையனஹள்ளி ஊராட்சிக்குட்பட்டது சந் தாரப்பட்டி போயர்கொட்டாய். இங்கு 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சந்தாரப்பட்டி முதல் போயர் கொட்டாய் வரையிலான 1.5 கிலோ மீட் டர் நீளமுள்ள மண் சாலை, 40 ஆண்டுக்கு முன் போடப் பட்டது. தற்போது இது குண்டும், குழியுமாக காட்சியளிக் கிறது. இங்குள்ளவர்கள் வேலை தேடி வெளியூருக்கு செல்கின்றனர். இங்கிருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சாலை வசதியின்றி, மிகவும் அவதிய டைந்து வருகின்றனர். தார்ச்சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே, எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தார்ச்சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 10 பயணிகள் காயம்
நாமக்கல், ஆக.13- பள்ளிபாளையம் அருகே அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில், 10 பயணிகள் காயமடைந்தனர். கள்ளக்குறிச்சியில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து ஒன்று செவ்வாயன்று மாலை பள்ளிபாளையம் வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆத்தூர் மல்லியக்கரை பகுதியைச் சேர்ந்த முருகன் ஓட்டி வந்தார். இதேபோல் ஈரோட்டிலிருந்து திருச்செங் கோடு நோக்கி சென்ற தனியார் பேருந்தை, பள்ளிபாளை யத்தைச் சேர்ந்த கதிரவன் என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார். எஸ்பிபி காலனி மேம்பாலம் அருகே வந்த அரசு பேருந்து இழந்து, நிலை தடுமாறி பக்கவாட்டு பக்கமாக திரும்பி நின்றது. இதனிடையே, எதிரே வேகமாக வந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் மீது மோதி நின்றது. இதில் அரசு பேருந்தில் பயணித்த ஏழு பெண்கள், மூன்று ஆண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இதைய டுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவலர்களுக்கு கையடக்க ‘சிக்னல்’ சாதனம்
நாமக்கல், ஆக.13- நாமக்கல் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், போக்குவரத்து காவலர்களுக்கு கையடக்க ‘சிக்னல்’ சாதனம் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரில் இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிக்னல் விளக்குகளை மதிக்காமல் குறுக்கும், நெடுக்குமாகச் செல்வதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, நாமக்கல்-சேலம் சாலை சந்திப்பில் போக்குவரத்தை சீர மைக்கும் காவலர்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, மழை பெய்து விட்டால் ஒரு மணி நேரத் துக்கு வாகனங்கள் நகராமல் நின்று விடுகின்றன. இவற்றை யெல்லாம் தவிர்க்கும் வகையில், முக்கிய சாலை சந்திப்பு களில் பணியில் உள்ள போக்குவரத்துக் காவலர்களிடம் கையடக்க சிக்னல் மின் சாதனம் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இருக்கும் வேளைகளில், ஒரு நிமி டம், ஒன்றரை நிமிடம் வரை வாகனங்கள் சிக்னல் விளக்குக் காகக் காத்திருக்காமல் உடனடியாக அவற்றை அனுப்புவதற் காகவும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரும்போது அவற்றுக்கு வழிவிட்டு அனுப்பவும் இந்த கையடக்க மின் சாதனம் மூலம் காவலர்கள் சிக்னல் விளக்குகளை இயக்கி வருகின்ற னர்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
சேலம், ஆக.13- இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சேலத்தில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024 - 25 ஆம் ஆண்டிற்கான, 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இளை ஞர்கள் மற்றும் மகளிருக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் வருகின்ற தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. சின்னகவுண்டா புரம், ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆக.17 ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் துவங்கும் இந்த முகாமில், அனைத்து இளைஞர்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 99420 73162, 98943 10758 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளில் கிராம சபை
திருப்பூர், ஆக.13 - இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட் டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரி வித்துள்ளார். இதுகுறித்தி மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட் டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், வரும் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு, கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறுகிறது. கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை. தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி வரி செலுத்தும் சேவை குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல். சுயசான் றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைப்ப டுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, தமிழ்நாடு உயிர்ப் பல்வ கைமை வாரியம், உயிர்பல்வகைமை மேலாண்மைக்குழு, மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் இதர பொருட்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும். கிராம பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத் தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கூறப்பட்டுள்ளது.
கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த இருவர் கைது
தருமபுரி, ஆக.13- மகேந்திரமங்கலம் அருகே கருவில் உள்ள சிசுவின் பாலி னத்தை கண்டறிந்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலத்தை அடுத்த சீங் கேரி கூட்ரோடு அருகே உள்ள வீட்டில் சட்டவிரோதமாக கர்ப் பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்ட றிந்து, பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய் யப்படுவதாக, சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்திக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாந்தி, மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்ளிட்ட குழுவினர் சீங்கேரி கூட்ரோடு பகுதியில் செவ்வா யன்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருந்த வீட்டிற்குள் கர்ப்பிணி ஒருவர் செல் வதை கண்காணித்து, உள்ளே சென்று பார்த்த போது, 4 பேர் கொண்ட குழுவினர் கர்ப்பிணிகளுக்கு வயிற்றில் உள்ள சிசு வின் பாலினத்தை கண்டறிந்தது தெரியவந்தது. இவர்களை கண்டதும் இருவர் தப்பியோடி தலைமறைவாகினர். மற்ற 2 பேரை இருவரை பிடித்து விசாரித்ததில், தருமபுரி, இலக் கியம்பட்டியைச் சேர்ந்த கற்பகம் (39), வெண்ணாம்பட்டி யைச் சேர்ந்த வடிவேல் (40) என்பதும், தப்பியோடியவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமலை (40), ஜோதி (37) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமி ருந்த ஸ்கேன் செய்யும் கருவி, மருந்துகள் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரை யும், மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
சுதந்திர தின விழா விருது நீலகிரியில் இருவர் தேர்வு
உதகை, ஆக.13- தில்லியில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில், நீலகிரி மாவட்டத்தில் இருந்து கிராம செவிலியர் உட்பட 2 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் 78 ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம்தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ கத்திலும் சுதந்திரதின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள் ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் பல்வேறு பிரிவுகளில் சிறப் பாக பணிபுரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம சுகாதார செவிலியர் மற்றும் வாலிபர் ஒருவர் என 2 பேருக்கு ஒன்றிய அரசு தில்லியில் நடைபெறும் சுதந்திர தின விழா வில் பங்கேற்று விருது பெற உள்ளனர். சிக்கலான உடல்நிலை பிரச்சனை உள்ள தாய்மார்களுக்கு தனிக்கவனம் செலுத்தி, பிரசவம் வரை கூடுதல் கண்காணிப்புப் பணி செய்த அரவேனு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஜமுனா என்பவர் விருது பெற தேர்வாகியுள்ளார். இதேபோல், நேரு யுவகேந்திரா அமைப்பை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் மற்றொரு பிரி வில் விருது பெற தேர்வாகியுள்ளார். இவர்கள் விருது பெற தில்லி சென்று வர தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
விளை நிலங்களை பறிக்க முயலும் பாஜக அரசு
தருமபுரி, ஆக.13- விளை நிலங்களை பறித்து, கார்ப்பரேட்டுகளுக்கு வழங்க முயற் சிக்கும் பாஜக அரசிற்கு எதிராக போராட வேண்டும், என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில், ஆக.12,13 ஆகிய தேதிகளில் பழங்குடி செயற் பாட்டாளர்களுக்கான பயிற்சி முகாம், தருமபுரியில் நடைபெற் றது. இதில் “நில உரிமை போராட்டம்” என்ற தலைப்பில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் பேசுகையில், பழங்குடி மக்கள் இந்திய சமூகத் தில் அனைத்து பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். குறிப்பாக அசாம் மாநிலத்தில் 1300 ஆம் ஆண்டு முதல் 1800 வரை அகோம்ஸ் பழங் குடி மக்கள் ஆட்சி செய்தனர். ஜார் கண்ட், மகாராஷ்டிரா, ஒரிசா, பீகார் போன்ற வடமாநிலங்களில் ஆங்கி லேயர் அரசாங்கத்தை எதிர்த்து பழங்குடியினர் போராட்டம் நடத்தி யுள்ளனர். மலையோடு இணைந்து வாழும் கோந்த இன பழங்குடியினர் நில உரிமைக்காக ஜாமீன்தாரை எதிர்த்து போராடினர். ஜார்கண்ட் பழங்குடியினரின் விடுதலைக்கான போராட்டத்தை வரலாற்றிலிருந்து புறந்தள்ள முடியாது. ஜார்கண்ட் மாநிலத்தில் 1793 ஆம் ஆண்டு பழங் குடி அல்லாதோரை மலைப்பகுதி யில் குடியமர்த்தும் வேலையை ஆங் கிலேய அரசு செய்தது. இதற்கு எதி ராகவும், பிரிட்டிஷ் படையினர் மீது பழங்குடி மக்கள் ‘கொரில்லா’ போராட்டம் நடத்தினர். அதன் பிறகு 1820 ஆம் ஆண்டு முண்டா இன் பழங்குடி மக்கள் ஜமீன்தா ருக்கு எதிராக, நில உரிமை மற்றும் சுயமரியாதையை பாதுகாக்க போராட்டம் நடத்தினர். 1936 ஆம் ஆண்டு விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது. 1938 ஆம் ஆண்டு ஜாமீன்தாரர்களை எதிர்த்து 77 குத்தகைதாரர்களுடன் விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தியது. 1937 ஆம் ஆண்டு மத ராஸ் மாகாணத்தில் 130 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. தமிழ் நாட்டில் கீழ் தஞ்சை, சேலம், ஆத் தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலச்சுவான்தார்களை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டது. தற்போது பாஜக அரசு விவசாயிகளிடமும், பழங்குடி மக்களிடம் உள்ள நிலங்களை பிடுங்கி கார்ப்பரேட்களுக்கு கொடுக்க உள்ளது. இதனை எதிர்த்து நாம் போராட வேண்டும் என அழைப்பு விடுத்தார். மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன் பேசுகையில், 1992 ஆம் ஆண்டு கொல்லிமலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் துவங் கப்பட்டது. இதற்கு காரணம் ரூ.5 வட்டிக்கு வாங்கிய கடனுக்காக, கடன் வாங்கியவரின் மனைவியை கந்து வட்டிக்காரர் அழைத்து சென் றதை எதிர்த்து நமது சங்கம் போரா டியது. இதற்கு முன்பு 1971 ஆம் ஆண்டில் கல்வராயன் மலையில் பஷாஜான் தலைமையில் போராட் டம் நடைபெற்றது. 1980 ஆம் ஆண்டு சேலம், 1984 ஆம் ஆண்டு ஆத்தூ ரில் மலைவாழ் சங்க கூட்டம் நடத் தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி யது. வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை மலைவாழ் மக்கள் சங்கம் பெற்று தந்துள்ளது. பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணம், அந்த கிரா மத்திற்கு பொருளாதார மேம்பாடு என மலைவாழ் மக்கள் சங்கம் போராடி வருகிறது. பழங்குடி மக்க ளின் உரிமைகளுக்காக போராடும் ஒரே சங்கம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், என்றார். இதைத்தொடர்ந்து, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பி.டில்லிபாபு, மாநிலப் பொரு ளாளர் ஆ.பொன்னுசாமி, மாநில துணைச்செயலாளர் ஜி.செல்வம், தருமபுரி மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்டத் தலைவர் ஏ.அம்புரோஸ், மாநிலக் குழு உறுப்பினர் எல்.ஜெயராமன் ஆகியோர் உரையாற்றினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.
பேருந்து மோதி விபத்து – மாணவர்கள் காயம்
கோவை, ஆக.13- சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் காயமடைந்தனர். கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரி பேருந்து செவ்வாயன்று காலை சூலூர் பகுதியிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. ரத்தினவேலு என்பவர் பேருந்தை இயக்கிவந்தார். அப்போது பாப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது பேருந்து மோதி விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். விபத்தை கண்ட உடன் அருகில் இருந்தவர்கள், துரித மாக செயல்பட்டு, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால், பல்லடம் - கொச்சி நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பச்சிளங்குழந்தை மீட்பு
ஈரோடு, ஆக. 13- சென்னிமலை சாலை அருகில் உள்ள புதரில் கிடந்த பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை பற்றி விபரம் தெரிந்தவர்கள் தகுந்த ஆவணங்களு டன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டம், சென்னி மலைரோடு ரங்கம்பாளையம் அருகே உள்ள இரண்டு தனியார் திருமண மண்டபங்களுக்கு இடைப்பட்ட சாலையோர புதரில் இருந்து கடந்த ஜூலை 17 ஆம் தேதியன்று பிறந்த பச்சிளங் குழந்தையை மீட்கப்பட் டது. அக்குழந்தை ஈரோடு தலைமை மருத்துவமனை யில் சிகிச்சைக்கு பிறகு குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை பற்றி விபரம் தெரிந்தவர்கள் தகுந்த ஆவணங்களுடன் செய்தி வெளியான 60 நாட்களுக்குள் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலகம், புதிய கட்டிடம் 6 ஆவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு – 638011 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள் ளது.
ஜனநாயகத்தை காப்போம் உதகையில் சிறப்பு கருத்தரங்கம்
உதகை, ஆக.13- ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழி லாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து தொடர் போராட்டத்தின் ஒருபகுதியாக, நீல கிரி மாவட்டத்தில் ஜனநாயகத்தை காக்க விடி யலை நோக்கி சிறப்பு கருத்தரங்கம் புதனன்று (இன்று) நடைபெற உள்ளது. இதுகுறித்து, இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாவட்டச் செயலாளர் வினோத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, மக்கள் விரோத ஆட்சியை நடத்திய மோடி அரசு, நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பான்மையை இழந்து மற்றவர்கள் தயவுடன் ஆட்சியை நடத்தி வருகிறது. இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாத மோடி அரசு மீண் டும் கார்ப்ரேட்டுகளுக்கு கதவை திறந்துவி டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர் கள், சிறுபான்மையினர், தலித்துகள், பழங் குடிகள், பெண்கள் என அனைத்து தரப்பின ரும் மோடி அரசின் ஆட்சியல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய மக்கள் விரோத மோடி அர சின் கொள்கைகளை அம்பலப்படுத்தும் வகையில், நீலகிரி மாவட்டம் முழுவதும், ஆர்ப்பாட்டங்கள், சட்ட நகல் எரிப்பு போராட் டம், துண்டு பிரசுரம் விநியோகம் என பல் வேறு வகைகளில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் தொடர் முன்னெடுப்பு களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (புதன்கிழமை) ஜனநாயகத்தை காக்க விடியலை நோக்கி என்கிற சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகி றது. காலை 11 மணிக்கு உதகை ஏடிசியிலும், மாலை 4 மணிக்கு குன்னூர் ஹோட்டல் புளுஹில்சிலும் நடைபெறுகிறது. இக்கருத்த ரங்கில், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.ப. பிரின்ஸ்கஜேந்திரபாபு பங்கேற்க உள்ளார். இந்நிகழ்வை வெற்றிபெற மத்திய தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள், ஊழியர்கள் பெரும்திரளாய் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
வயநாடு நிவாரணத்துக்கு நிதி வழங்கிய மாணவர்
ஈரோடு, ஆக.13- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஆட்சியரிடம், மாணவர் ஒருவர் வயநாடு பேரிடர் நிதியாக ரூ.10 ஆயி ரத்தை வழங்கினார். ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளை யத்தை சேர்ந்த லித்துரன் நிவேதிதா (10). இவர் வயநாடு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்து 200 க்கான வங்கி வரை வோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். அவரை அழைத்து வந்த அவரது தாத்தா மணிவண்ணன் கூறியதாவது, எனது மகள் நிவேதிதாவின் மகன் லித்துரன் நிவேதிதா வடுகப் பட்டி ராஜேந்திரன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரது சேமிப்பு பணம் மற் றும் உறவினர்கள், தெரிந்தவர்களிடம் சேகரித்த ரூ.10 ஆயிரத்து 200 ஐ வங்கி வரைவோலை எடுத்து கேரளா மாநில முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் சேரும் வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சி யர் மூலம் அனுப்பி வைக்கிறார். வயநாட்டில் நடந்த சம்பவத்தை பார்த்தது முதல் எனது பேரன் அழுத்த மான மனநிலையில் காணப்பட்டதுடன் அவர்களுக்கு சிறு தொகையாவது வழங்க வேண்டும் என இத்தொகையை சேகரித்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளார் என்றார்.
ஐ.டி நிறுவன ஊழியரிடம் ரூ.20 லட்சம் மோசடி
ஐ.டி நிறுவன ஊழியரிடம் ரூ.20 லட்சம் மோசடி உதகை, ஆக.13- ஆன்லைன் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், கூடுதல் வருமானம் தருவதாக கூறி, ஐ.டி நிறுவன ஊழியரி டம், ரூ. 20 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியை சேர்ந்தவர் டொனால்ட்(25), இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணி யாற்றி வருகிறார். இவருக்கு, பங்குச்சந்தையில் முதலீடு செய்வது குறித்து, இன்ஸ்டாகிராம் மூலமாக விளம்பரம் வந்துள்ளது. அந்த லிங்க் மூலம் தொடர்பு கொண்டு புதிய வாட்சப் குழுவில் சேர்ந்துள்ளார். தொடர்ந்து, மோசடி ஆசாமிகள் அவரை வாட்சப் மூலம் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார் எண் உள்ளிட்டவற்றை வாங்கி, ஆன்லைன் மூலம் பங்குச்சந்தை யில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி முதலில், 500 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அவருக்கு கூடுதல் பணம் கிடைத்துள்ளது. பின், பல தவணைகளில், 20 லட்சம் ரூபாய் வரை பணம் அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் செலுத்தி யுள்ளார். அதற்கு கூடுதல் பணம் வரவில்லை. ஒரு கட்டத் தில் முதலீடு செய்த பணமும் அவருக்கு கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டொனால்ட் இதுகுறித்து நீலகிரி சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித் தார். அதன் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காவல் ஆய்வாளர் மீனா பிரியா கூறுகை யில், பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்கை தற்காலிகமாக முடக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகி றோம். ஆன்லைன் மூலம் கூடுதல் முதலீடு என்று ஆசை வார்த்தை கூறினால் அதை நம்பி எந்த ஒரு சமூகவலை தளங்களிலும் வரும் லிங்கை தொட வேண்டாம், மேலும் இது போன்ற சம்பவங்களில் ஏமாறாமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.
வணிக வளாகங்களுக்கு சீல்: வணிகர் சங்கங்கள் போராட்டம்
பொள்ளாச்சி, ஆக.13- பொள்ளாச்சி நகரப் பகுதிகளில், வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் நடவ டிக்கையை கண்டித்து வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளுக்கு உட் பட்ட மகாலிங்கபுரம் மற்றும் புதிய திட்ட சாலை ஆகிய பகுதிகளில், வணிக பயன் பாட்டிற்கு அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந் தது. இதனையடுத்து, பொள்ளாச்சியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசா ரித்த நீதிபதிகள், விதியை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்ட னர். இதனையடுத்து, கடந்த 11 ஆம் தேதி முதல் விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறப்ப டும் கட்டிடங்களுக்கு பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் சீல் வைக்கும் பணியை மேற் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங் கத்தினர் மற்றும் வணிகர் சங்கங்கள் சார்பில் செவ்வாயன்று கடையடைப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். மேலும், வணிகர்கள் சங்கங் கள் சார்பில், ராஜேஸ்வரி திடல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளான வணிகர்கள் பங்கேற்றனர். வணிகர் சங்கங்களின் கடையடைப்பால் மகாலிங்கபுரம், புதிய திட்ட சாலை, கடைவீதி போன்ற பகுதிகள் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
சவுக்கு சங்கருக்கு போலீஸ் காவல்
கோவை, ஆக.13- பல்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கும் யூடியுபர் சவுக்கு சங்கருக்கு, ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சவுக்கு சங்கர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு யூடியூப் சேனலில், இரு சமூகத்தா ரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வித மாக பேசியதாக நேதாஜி பேரவையை சேர்ந்த முத்து என்பவர் கோவை மாவட்ட பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக சவுக்கு சங்கரை மூன்று நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளிக்க கோரி காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்த னர். இந்த போலீஸ் காவலுக்கு மனு விசா ரணைக்காக, சவுக்கு சங்கரை செவ்வாயன்று கோவை ஜே எம் 4 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். எந்தவிதமான உடல் ரீதி யான துன்புறுத்தல்கள் கூடாது என்ற கண்டிப் புடன், நீதிபதி சரவணபாபு ஒரு நாள் போலீஸ் காவல் கொடுத்து உத்தரவிட்டார். புத னன்று மாலை 6 மணிக்கு மீண்டும் நீதிமன்றத் தில் சவுக்கு சங்கரை ஆஜர் படுத்த அறிவுறுத் தினார்.
புத்தகம் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்திடுக
ஈரோடு, ஆக. 13- புத்தகத் திருவிழாவில் உள்ள புத்தக அரங்குகளின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண் டும் என்று மக்கள் சிந்தனைப் பேரவை வலியுறுத்தியுள்ளது. ஈரோடு புத்தகத் திருவிழா உற் சாகமாக நிறைவு பெற்றது. இதனைத்தொடர்ந்து மக்கள் சிந் தனை பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக புத்தகத் திருவிழா வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டும் 5 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இவ்விழாவுக்கு வந்திருந்தனர். சுமார் ரூ.5 கோடி அளவிற்கு புத்தகங்கள் விற்பனை யாகி உள்ளது. சுமார் 1,000 புதிய புத்தகங்கள் விழாவில் வைக்கப்பட் டிருந்தன. பல புதிய எழுத்தாளர்க ளின் அறிமுகம் இவ்விழாவில் நடை பெற்றது. தினமும் மாலையில் சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர் கள், அறிவியல் பேராசிரியர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. பல நாட்களில் மழை வந்தபோதிலும் பொதுமக்களின் ஆதரவு இருந்தது. ஆனால் கடந்த ஆண்டுகளுடன் ஒப் பிடும்போது தற்போது புத்தகங்க ளுக்கு பல மடங்கு ஜிஎஸ்டி, மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள் ளது. மேலும் இணைய வழியில் 30 விழுக்காடு கழிவுடன் புத்தகங்கள் வீட்டுக்கே கொண்டு வந்து தரப்படு கின்றன. புத்தகத் திருவிழாவில் குறைந்தபட்சம் 10 விழுக்காடு கழிவு தரப்படுகிறது. எனவே இத்தொழி லில் கடும் போட்டியை பதிப்பா ளர்கள் மற்றும் விற்பனையாளர் கள் எதிர்கொள்கின்றனர். புத்தகத் திருவிழா என்ற பெயரை உபயோகப்படுத்தியதே பேரவை தான். எனவே மாநில அர சும் புத்தகத் திருவிழா என்ற பெயரை அரசாணையில் வெளி யிட்டு அதற்கான ஊக்க தொகையை தர முன்வந்துள்ளது. இது பேரவைக்கு கிடைத்த ஒரு பெரும் வெற்றியாகும். தொடர்ந்து பல ஊர்களில் விழா நடைபெறுவதால் புத்தகங் கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது எங்களுக் கும் மகிழ்ச்சியாகும். புத்தகத் திரு விழா வஉசி பூங்காவில் தொடர வேண்டும் என்பது பலரது விருப்ப மாகும். இதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும் என்றார்.