திருப்பூர் மாவட்டத்தில், அக்டோபர் 15 முதல், நவம்பர் 15 வரையில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற, திருப்பூர் மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு கூட்டத்தில், அவிநாசி ஒன்றியக்குழு சார்பில் முதற்கட்டமாக 42 தீக்கதிர் சந்தாவிற்கான தொகை, ரூ.84 ஆயிரத்தை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் காமராஜிடம், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜ் வழங்கினார்.