districts

img

‘எரியும் வார்த்தைகள்’ நூல் வெளியீடு

கோவை, ஜூன் 23- கோவையில் நடைபெற்ற ‘எரியும் வார்த்தைகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண் டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின், கோவை கிழக்கு கிளை சார்பில், கவிஞர் எல்.ஜி.சிவக்குமாரின் ‘எரியும் வார்த்தைகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று கோவை, காட்டூர் மில் சங்கத்தில் நடைபெற்றது. இந்நி கழ்விற்கு கிளைத் தலைவர் செ.விவேகா னந்தன் தலைமை வகித்தார். கவிஞர் முத்தையா மோகன் வரவேற்றார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் நூலை வெளியிட, தமுஎகச மாவட்டச் செயலாளர் அ.கரீம், ஆர்.மூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இயக்குநர் ரவி சந்தர், வி.தெய் வேந்திரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றி னர். கவிஞர் ந.முத்து, வழக்கறிஞர் ரேணுகா தேவி ஆகியோர் நூல் அறிமுகம் செய்து வைத்து பேசினர். நூலாசிரியர் எல்.ஜி.சிவகுமார் ஏற்புரையாற்றினார். வழக்கறிஞர் உமாசங்கர் நன்றி கூறினார்.