சேலம், ஜன.30- 100 நாள் வேலை திட்டத்தில், பணி அட்டை வைத்துள்ள அனைவ ருக்கும் வேலை மற்றும் சம்பளப் பாக்கியை விரைந்து வழங்க வேண் டும், என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 100 நாள் வேலைக் கான பணி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள சம் பளப் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். இத்திட்டத்திற்கு ஆண் டுக்கு ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும், என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் தாலுகா செயலாளர் ஆர்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சேகர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, சிபிஎம் தாலுகா செயலாளர் ஏ.ஆறுமுகம், விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் ஏ.மாணிக்கம், துணைத்தலைவர் டி.செந்தில் குமார், பொருளாளர் ஏ.பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, ஓமலூர் அருகே உள்ள ரெட்டியூர், அத்திக்குட்டை, முள்ளுசெட்டிபட்டி, தும்பிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சின் ராஜ், தாலுகா செயலாளர் ரவிக் குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர். வாழப்பாடியில் சங்கத்தின் செயலாளர் தங்கவேல் தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், ஏராளமான விவ சாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தருமபுரி அனைத்து ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறு திச் சட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 200 நாள் வேலை, தினக்கூலியாக ரூ. 600 வழங்க வேண்டும். இத்திட்டத் தினை பேரூராட்சிக்கும் விரிவுப்ப டுத்த வேண்டும், தருமபுரி மாவட் டம், பாலக்கோடு பேரூராட்சியுடன் ஜெர்தலாவ் கிராம ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் வட்டத் தலைவர் ஜி.பாண்டியம் மாள் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் எம்.முத்து, துணைத் தலைவர் சி.ராஜா, வட்டச் செயலா ளர் சுரேஷ் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதில் சிபிஎம் வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ், தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டத் தலைவர் பி. ஜெயராமன், செயலாளர் ஏ.சேகர், விவசாயிகள் சங்க வட்டச் செயலா ளர் முருகன், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் கோவிந்தசாமி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். அவிநாசி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, விதொச ஒன் றியத் தலைவர் வி.பி. முருகேசன் தலைமை ஏற்றார். இதில், ஒன்றிய துணைத் செயலாளர் ஆர். பழனிச் சாமி, துணைத் தலைவர் கே. குரு நாதன், நிர்வாகிகள் பொன்னுச் சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித் தனர். கோரிக்கைகளை விளக்கி சங் கத்தின் மாவட்டத் தலைவர் ஏ. சண்முகம், செயலாளர் ஏ.பஞ்சலிங் கம், சிஐடியு பொதுத் தொழிலா ளர் சங்க செயலாளர் ஏ. ஈஸ்வர மூர்த்தி, சிஐடியு உள்ளாட்சி ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் பி. பழ னிச்சாமி, சிஐடியு கட்டுமான சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.கனக ராஜ் உள்ளிட்டோர் உரையாற்றி னர். இதில் திராளானோர் பங்கேற்ற னர். பொள்ளாச்சி பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, விவசாயத் தொழி லாளர் சங்க தாலுகாச் செயலாளர் கே.ஏ. பட்டீஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.மகாலிங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநா தன், சிஐடியு தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.சரவ ணன், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி மண்டலச் செயலாளர் பத் மநாபன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகாச் செயலாளர் ஸ்டா லின் பழனிசாமி ஆகியோர் உரை யாற்றினர். இதில் திரளானோர் பங் கேற்றனர்.