districts

காதல் திருமணம்: இளைஞர் சாதி ஆணவப் படுகொலை

கிருஷ்ணகிரி, ஜூன் 7- சூளகிரி அருகே மாற்று சமூகத் தைச் சேர்ந்த பெண்ணை  காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர்  சாதி ஆணவ படுகொலை செய்யப்ப ட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பி.கொத்தமல்லி கிராமத்தை சேர்ந்த சுந்தரேசன் மகன் சந்தோஷ் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 22 வயதாகும் இவர் மாடுபிடி வீரர் ஆவார். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்ததால், விழாக்கள் நடைபெறும் கிராமங்களுக்கு காளைகளை அழைத்துச் செல்வது வழக்கம். இதன் மூலமாக ஓசூர் அருகே உள்ள  குமுதே பள்ளியை சேர்ந்த எல்லப்பா  மகன் முருகேசனுடன் நட்பு ஏற்பட்டு பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சந்தோஷ் அடிக்கடி முரு கேசன் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். இதனிடையே முருகேசன் 20  வயது தங்கை மீனாவுடன் சந்தோஷூக்கு  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறியது. சந்தோஷ் மாற்று சமூகம் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.  இந்நிலையில், 7 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மீனா வும்-சந்தோஷூம் திருமணம் செய்து  கொண்டனர். இதனால், ஆத்திர மடைந்த மீனாவின் அண்ணன் முருகே சன், திருமணம் செய்து கொண்ட இரு வரையும் பிரிக்க பலமுறை முயற்சித் துள்ளார். முடியாத நிலையில், சந்தோஷை கொலை செய்துவிடுவதா கவும் கூறிவந்துள்ளார்.

இந்நிலையில், காதல் திருமணம் செய்து கொண்ட மீனா, தனக்கு சொத்தை பிரித்து தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் கோபமடைந்த அண்ணன் முருகேசன், அவரது நண்பர் குமார், வின்சென்ட் குமார் ஆகியோர் துணையுடன் இம்மாதம் 4 ஆம்  தேதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு  பி.கொத்தப்பள்ளி அருகில் சந்தோஷை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர். இந்த  சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவலை அறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச்  செயலாளர் நாகேஷ்பாபு, சந்தோஷ் குடும்பத்தினரையும் கணவனை இழந்த  மீனாவையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.  சாதி வெறி, காதல் திருமணத்தின் மீதான வெறுப்பு, குடும்ப சொத்தில் சட்டப்படி பங்கு கேட்டதாலும் தங்கை யின் கணவனை கொடூரமாக கொலை  செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். மேலும், கணவனை இழந்து  வாடும் மீனாவுக்கும் கொலை செய்யப்பட்ட  சந்தோஷ் குடும்பத்திற் கும் தமிழக அரசு உடனடியாக நிவார ணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.