கிருஷ்ணகிரி, ஜூலை 20- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கிருஷ்ணகிரி திட்ட 3 ஆவது மாநாடு திட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமை நடைபெற்றது. சபரி வரவேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் நஞ்சுண்டன் துவக்க உரையாற்றினார். திட்டச் செயலாளர் ஏ.கருணாநிதி செயலாளர்கள் அறிக்கையும், பொருளாளர் முனிசாமி வரவு-செலவு அறிக்கைகையும் சமர்ப்பித்தனர். மண்டல செயலாளர் கோவிந்தராஜ் வாழ்த்திப் பேசினார். விவசாயிகள், மக்கள் விரோத 2021 மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும், 2019-ல் முடிக்க வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை இனியும் இழுத்தடிக்காமல் உடனடியாக பேசி முடிக்க வேண்டும், மின்வாரிய காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திட்டத் தலைவராக துரை, செயலாளராக ஏ. கருணாநிதி, பொருளாளராக முனிசாமி ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.