districts

img

அரசு நிலங்களை மீட்டெடுக்க ஓசூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, அக். 17- ஓசூர் வட்டம் சென்னசந்திரம் ஊராட்சியில் கெலவரப்பள்ளி அணையின் அருகே உள்ள திம்ம சந்திரம் வருவாய் கிராமத்திற்கு சொந்தமான 80 ஏக்கர் பைமாசி நிலம் உள்ளது. இது அங்குள்ள சப்பலம்மா கோவிலுக்கு சொந்தமான நிலமாகும். இதில் சுமார் 70 ஏக்கர் நிலத்தை சித்தன பள்ளியை சேர்ந்த சிவானந்தா உள்ளிட்ட சிலர் போலி ஆவ ணங்களை தயாரித்து பத்திரப் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த நிலத்திற்கு பட்டா வாங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல் பாலிட பள்ளி ஊராட்சி இடிப்பள்ளி கிராமத் தில் 60 ஏக்கருக்கும் மேற்பட்ட புறம் போக்கு நிலத்தை ஒரு தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. இதை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வரு கின்றனர். இதுகுறித்து பலமுறை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தி வட்டாட்சியர் வருவாய் கோட்டாட்சியரிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நந்திமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் இன்னும் நடுநிலைப்பள்ளி கட்டி டத்திலேயே உயர்நிலைப் பள்ளி யும் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில் போதிய இட வசதியும், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். அதேபோல் மாசிநாயக்கன பள்ளி உயர்நிலைப் பள்ளியிலும் சுற்றுச்சுவர், கழிப்பறை, குடிநீர் இல்லாத நிலையே உள்ளது. மேலும் இங்கு தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களே உள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் அதி காரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில் சென்ன சந்திரம் ஊராட்சி திம்மசந்திரம் சப்பலம்மா கோவிலுக்கு சொந்த மான 80 ஏக்கர் பைமாசி நிலத்தை யும்,  இடிப்பபள்ளி கிராமத் தில் தனியார் நிறுவனத் தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 60 ஏக்கர் அரசு புறம்  போக்கு நிலத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நந்திமங்கலம், மாசி நாயக்கனப்பள்ளி ஆகிய பகுதி களில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு போதுமான கட்டிட வசதி, குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி, போதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். நியமிப்பது, கழிப்பறை வசதிகள் உடனடியாக செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றியச் செயலாளர் ராஜா ரெட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், மாவட்டக் குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி, நாராயணசாமி, வெங்கடேஷ்ரெட்டி, முனி வெங்கடப்பா, அனுமந்தராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  பின்னர் சார் ஆட்சியர் சரண்யாவிடம் நிர்வாகிகள் மனு அளித்து பேசினர். அப்போது பைமாசி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுப்பதாகவும், பள்ளிகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், ஏழை எளிய மக்கள் இல வச வீட்டு மனை கேட்டு கொடுக்கப்பட்டுள்ள மனுக்களை பரிசீலனை செய்வதாகவும் சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.