districts

ரயில் பெட்டி மீது ஏறிய வாலிபர் உடல் கருகி பலி

காஞ்சிபுரம்: டிச.6-  திருபெரும்புதூர், ஒரகடம் பகுதிகளில உள்ள தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் இரு சக்கர, நான்கு சக்கர வாக னங்களை நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு ரயிலில் கொண்டு செல்ல வாலாஜாபாத்தில்  ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் முனையம் செயல்பட்டு வருகிறது.  இந்த நிலையில் திங்க ளன்று இரவு வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் சரக்கு ஏற்றி செல்வதற்காக ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென சரக்கு ரயில் மீது  ஏறினார். இதனை கண்ட அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் ரயில் பயணிகள் கூச்சலிட்டனர். அந்த நேரத்தில் வாலிபர் ரயில் பெட்டி மீது ஏறி நின்ற படி அருகில் சென்ற மின்  கம்பியை பிடித்தார். மின்  அதிர்ச்சிக்குள்ளான அந்த  வாலிபரின் உடல் முழுவதும்  தீப்பற்றிஎரிய தொடங்கி யது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கி ருந்தவர்கள் பதறியபடி கூச்சலிட்டனர். இதற்குள் தீ பரவி அந்த வாலிபர் உடல்  கருகி சில நிமிடங்களிலேயே  உயிரிழந்தார்.   தகவல் அறிந்ததும், செங்கல்பட்டு ரயில்வே போலீசார் மற்றும் காஞ்சி புரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். உடல் கருகிய வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத் தனர். பலியான வாலிபர்  யார்? மனநலம் பாதிக்கப் பட்டவரா? அல்லது தற்கொலை செய்து கொண் டாரா என்ற கோணத்தில் செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.