காஞ்சிபுரம், வாலாஜாபாத் அடுத்த நிர்வள்ளூரில் இயங்கி வரும் எஸ்.ஹெச் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்கியதற்காக 2 தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்ததைகண்டித்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 24வது நாள் போராட்டத்தில் பங்கேற்றத விச மாவட்ட செயலாளர் கே.நேரு, மாவட்டத் தலைவர் என்.சாரங்கன், நிர்வாகிகள் என்.நந்தகோபால், கே.செல்வம், லட்சுமணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்நிகழ்வில் போராட்ட நிதியாக ரூ.3ஆயிரம் வழங்கப்பட்டது.