districts

img

தேர்தல் காலங்களில் தூய்மை பணியை திறம்பட செய்த பணியாளர்களுக்கு பாராட்டு

காஞ்சிபுரம், ஜூன் 8- காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி யில், நாடாளுமன்றத் தேர்தலின் போது சிறப்பாக  பணியாற்றிய தேர்தல்  அலுவலர்கள் முதல் தூய்மை பணிகளை சிறப்பாக செய்த தூய்மை பணியாளர் வரை அனைவரையும் பாராட்டி வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி சான்றிதழ் அளித்தார்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி யில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உதவி தேர்தல் அலுவலராக வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி செயல்பட்டார்.

கடந்த 4ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவுற்ற பின்பும், தூய்மைப் பணி முதல் வாக்கு பதிவு இயந்திரங்களை ஒப்படைக்கும் வரை சிறப்பாக செயல்பட்டு எந்தவித சச்சரவுக்கும் துளியும் இடமில்லாமல் சிறப்பாக காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி செயல்பட்டது. மேலும்  வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகிய இரு தினங்களி லும் சிறப்பாக பணியாற்றிய அனை வருக்கும் நன்றியை தெரிவித்தார்.