கள்ளக்குறிச்சி,ஜன. 23- தலித் மக்களின் வீடு மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலி யுறுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் பொரசம்பட்டு, பொருவாரூர் மூங்கில் துறை பட்டு ஆகிய ஊர்களி லிருந்து உருட்டுக் கட்டை யுடன் வந்த இளைஞர்கள் கடந்த 18ஆம் தேதி மூங்கில் துறை பட்டு அம்பேத்கர் நகர் தலித் குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் 8க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களையும் அடித்து உடைத்தனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒரு குறிப்பிட்ட சாதி சங்க பணியனை அணிந்து கொண்டு தெருத் தெரு வாகச் சென்று சாதிப் பெயரைக் கூறி இழிவாக பேசி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.ஏழுமலை, ஒன்றியச் செயலாளர் செ.சிவாஜி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலை வர் ஜீ.ஆனந்தன், மாவட்டத் தலைவர் வி.ராஜா, மாவட்டச் செய லாளர் வே.ஏழுமலை, வாலிபர் சங்க மாநில துணை செயலாளர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பாதிக்கப் பட்டவர்களை சந்தித்து ஆறு தல் கூறியதுடன் விவ ரங்களையும் கேட்டறிந்த னர். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த நிர்வாகிகள், “ இச்சம்பவத்தில் தொடர் புடைய குற்றவாளிகளை அனைவரையும் காவல் துறையினர் கைது செய்ய வேண்டும். தலித் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறவேண்டும். சேதப்படுத்திய பொருட்க ளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப் பாளரையும் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.