கள்ளக்குறிச்சி, ஜூலை 14- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்து தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்த விபத்தில் 11 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
சின்னசேலம் அருகில் உள்ள தாகம்தீர்த்தாபுரம் அருகில் உள்ள வெல்டன் தனியார் பள்ளி பேருந்து சனிக்கிழமையன்று மாலை 33 மாணவர்களை ஏற்றி கொண்டு நயினார் பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து குரால் கைகாட்டி அருகே இரும்பு தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 11 மாணவர்கள் படு காயம் அடைந்த நிலை யில் கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.