districts

img

மணிமுக்தா அணையில் தண்ணீர் திறப்பு

கள்ளக்குறிச்சி, நவ. 6- விவசாய பாசனத்திற்காக மணிமுக்தா நதி அணையிலி ருந்து தண்ணீர் திறந்துவிடப்பட் டுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சியில்  மாவட்ட ஆட்சி யர் ஷ்ரவன் குமார் தலைமை யில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தண்ணீர் திறந்து வைத்தார். 61 நாட்களுக்கு 25 கன அடி பழைய பாசனத்திற்கும், 85 கன அடி, புதிய பாசனத்திற்கும் தண்ணீர் வழங்கவும், நீர் வரத்திற் கேற்ப பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படவுள்ளது.  5493 ஏக்கர் பாசனம்  அணையின் மொத்த நீர் மட்டம்  36 அடி, மொத்த கொள்ளளவு 736.96 மி.க.அடி அணையின் தற் போது நீர்மட்டம் 34 அடியாகவுள் ளது. சனிக்கிழமை (நவ. 5) முதல்  30ஆம் தேதி வரை 27 நாட்களுக்கு  பழைய பாசனம் ஆற்றில் வினாடிக்கு 25 கன அடியும், புதிய  பாசனம் ஆற்றில் வினாடிக்கு 85 கன அடியும், 27 நாட்களுக்கு பிறகு  டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை பழைய பாசனம் ஆற்றில் வினாடிக்கு 18 கன அடி யும், புதிய பாசனம் ஆற்றில் வினா டிக்கு 61 கன அடியும் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.  மேலும், நீர் வரத்திற்கேற்ப பாசன காலம் வரை தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படவுள்ளது. இன்றைய தினம் மணிமுக்தா நதி  அணையிலிருந்து தண்ணீர் திறப்பினால் பழைய பாசனப் பரப்பு 1,243 ஏக்கர் மற்றும் புதிய பாசனப் பரப்பு 4,250 ஏக்கர் நிலங்க ளும், மொத்தம் 5,493 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதில் சட்டமன்ற உறுப்பினர் கள் உதயசூரியன், கார்த்திகே யன், மணிக்கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் குநர் மணி, வேளாண் இணை  இயக்குநர் வேல்விழி, பொதுப் பணித்துறை (நீர் வளத்துறை) செயற்பொறியாளர் அருணகிரி, பொதுப்பணித்துறை (நீர் வளத் துறை) உதவி செயற்பொறியாளர் மோகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெரு மாள், வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, ஒன்றிய பெருந் தலைவர் அலமேலு ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.