கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவுக்கு காரணமான அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருவிக நகர் பகுதிக் குழு சார்பில் வெள்ளியன்று (ஜூன் 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர்கள் பா.தேவி, பூங்குழலி, பகுதி நிர்வாகிகள் தனம், சரளா, லீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.