districts

img

கள்ளக்குறிச்சி கொடுமையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்திற்கு 50 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டியும் அலட்சியமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியும் மாதர் சங்கத்தின் சார்பில் தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆயிஷா பேகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ. ராதிகா, மாநில செயலாளர் எஸ். லட்சுமி உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பாரதி, சின்னத்தாய், மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.