districts

img

சாலை வசதி கோரி மனு கொடுக்க சென்றவர்களை ஒருமையில் பேசிய கரூர் ஆட்சியர்: சிபிஎம் கண்டனம்

கரூர், மார்ச் 24 -  சாலை வசதி கோரி மனு கொடுக்க சென்றவர்களை கரூர்  மாவட்ட ஆட்சியர் ஒருமையில் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், மருதூர் பேரூராட்சிக் குட்பட்ட விஸ்வநாதபுரம் ஆசாரிகளத்தில் 50- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இந்த கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு சாலை வசதி இல்லை. இந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் விசுவநாதபுரி பிரிவு சாலையில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல  வேண்டும். இந்த மண் சாலை குண்டும், குழியுமாக  சேறும், சகதியுமாக மக்கள் பயன்படுத்த முடி யாத நிலையில் உள்ளது. மழைக்காலங்க ளில் மிக மோசமான நிலையில் பொதுமக்கள்  முற்றிலும் பயன் படுத்த முடியாத சாலை யாக இது உள்ளது. அவசரமாக மருத்துவ மனைக்கு செல்வதானாலும் இப்பகுதி மக்கள்  மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்த சாலையை  கடக்க வேண்டியுள்ளது.  இரு சக்கர வாகனத்தில்கூட செல்ல முடியாத நிலை உள்ளது. முறையான தெரு விளக்கு வசதிகளும் இல்லை. தார்ச்சாலை,  புதிய தெருவிளக்கு அமைத்தல் மற்றும் பொது சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து அரசு அதிகாரிகளிடமும் பலமுறை மனு கொடுத்தும், நேரில் சந்தித்து  பேசியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

கடந்த திங்கள்கிழமை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள்  குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விஸ்வநாதபுரி கிளை  சார்பில் கிளைச் செயலாளர் குழந்தைவேல், கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இரா.முத்துச்செல்வன் உள்ளிட்ட அப்பகுதி  மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாவட்ட  ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிப்ப தற்காக கூட்ட அரங்கிற்கு சென்றனர். மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மாண வர்களை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்தது மட்டுமின்றி கட்சியின் கிளை செயலாளர் குழந்தைவேலுவை ஒருமையில் ‘வெளியே போயா’ என அவமரியாதையாக பேசியுள் ளார். மேலும், ‘மனு கொடுக்க வந்தவர்கள்  மீது வழக்கு போடப்படும்’ என மிரட்டியுள் ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக் கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக் கிறது.  கரூர் மாவட்ட ஆட்சியரின் இதுபோன்ற அணுகுமுறை எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க வேண்டும். உடனடியாக அப்பகுதி மக்களின் குறைகளை தீர்க்க உரிய நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு தெரிவித்துள்ளார்.