கரூர், ஜூலை 14 - கரூர் மாவட்டம் முழுவதும் ஜூலை 1 முதல் 10 ஆம் தேதி வரை தீக்கதிர் நாளி தழுக்கு சந்தா சேர்ப்பு இயக்கம் நடை பெற்றது. இதனொரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியக் குழு சார்பில் வேலாயுதம் பாளையம், நொய்யல், புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரமாக நடை பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றியக் குழு சார்பில் 10 ஆண்டு சந்தா பெறப்பட்டு, அதற்கான தொகையை கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தத்திடம், தோகைமலை ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன் வழங்கினார்.
இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.சக்திவேல், பி.ராஜூ, பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.