districts

img

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மருந்தாளுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், ஏப்.29 - மக்கள் நலன் கருதி காலியாக உள்ள 1200-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியி டங்களை உடனே நிரப்ப வேண்டும். பட்டய மருந்தாளுநர்களின் வேலைவாய்ப்பினை பாதிக்கும் அரசாணை எண்.5-ஐ கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு  அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் கரூர்  மாவட்டக்குழு சார்பில் கரூர் அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு  அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில  தலைவர் மு.சுப்பிரமணியன், மாவட்ட பொரு ளாளர் ஞானபாரதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.சக்திவேல், மருந்தா ளுநர் சங்க மாவட்ட செயலாளர் கே.இளங்கோ ஆகியோர் கண்டன உரையாற்றினர். அரசு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சி.கண்ணன், அறிவ ழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.