districts

img

யோகா போட்டியில் சாதனை முதல்வரிடம் பரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு

கரூர், ஜூன் 22 - கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் வெள்ளியன்று 10 ஆவது சர்வதேச யோகா  தினக் கொண்டாட்டம் திருக்குறள் வாசித்தலு டன் தொடங்கி நடைபெற்றது. இப்பிரம்மாண்ட  விழாவில் 6000 பேர் கலந்து கொண்டனர்.

யோகா விளையாட்டுப் போட்டியில்  தேசிய சாதனை புரிந்தமைக்காக கரூர் பரணி  பார்க் மாணவர் கபிலனுக்கு, தமிழக முதல்வர் ரூ.1 லட்சம் பரிசு வழங்கி கடந்த  வாரம் சென்னையில் நடைபெற்ற விழாவில்  பாராட்டினார். 

பரிசு பெற்ற கபிலனுக்கு சர்வதேச யோகா  தினத்தன்று, பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பரணி பார்க்  கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.மோகன ரெங்கன் தலைமை வகித்தார். கரூர் குழந் தைகள் பாதுகாப்பு அலுவலர் பி.மஞ்சு, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசிய சாதனை மாணவர் கபிலனுக்குக் கோப்பையும் பரிசும் வழங்கிப் பாராட்டி னார்.