கடலூர், ஜூன் 15- கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் (சில்வர் பீச்) “2022 கோடை நெய்தல் விழா” ஜூன் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், தலைமையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விழாவை துவக்கி வைக்கிறார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். 3 நாட்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்திடும் வகையில் அனைத்து துறைகள் வாயி லாக அரங்குகள் அமைக்கப்பட்டும். பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் புத்தக கண்காட்சியும், வீட்டு உபயோகப்பொருட்கள் கண்காட்சியும் இடம் பெறுகின்றன. இந்த விழா தினசரி காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். மூன்று நாட்களுக்கு கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை, பள்ளி, கல்லூரி மாணவர்களின் பரதம், நடனம், நாடகம், சிலம்பாட்டம், தப்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. “மகிழ்ச்சியான வாழ்வினை தீர்மானிப்பது குடும்பச் சூழலே - சமுதாயச் சூழலே” என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி பட்டிமன்றம், முல்லை தயாளன் நகைச்சுவை நிகழ்ச்சி, விஜய் டிவி பிரபலங்களின் இன்னிசை நிகழ்ச்சிகள், னையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், காளையாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.