districts

img

நிழல் இல்லா நாள்: அறிவியல் இயக்கம் அறிவிப்பு

கடலூர், ஏப். 18- சூரியன் நேர் உச்சிக்கு வருவதால் ‘நிழல் இல்லா நாள்’ (பூஜ்ஜிய நிழல்) என்று அழைக்கப்படுகிறது. சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால் சூரியன் எப்போதும் சரியாக தலைக்கு மேல் வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். சூரியன் செங்குத்தாக வரும்போது, ஓரிடத்திலுள்ள ஒரு பொருளுடைய நிழலின் நீளம், ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடு கின்றனர். இந்த அரிய, அதிசய நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாட்களில் ஏற்படும். சூரியனின் வடக்கு நகர்வு நாட்களில், ஒரு நாளும், தெற்கு நகர்வு நாட்களில் ஒரு நாளும் என ஆண்டுக்கு இருமுறை நிழல் இல்லாத நாள் ஏற்படும். பொதுவாக மகர ரேகைக்கு 23.45 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்காகவும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வை கண்டு களிக்கலாம். பகல் 12 மணிக்குத்தான் பொருட்களின் நிழல் பூஜ்ஜியமாகும். அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் 20.4.2022 புதன்கிழமை அன்று பகல் 12:10 மணி முதல் 12.11 வரை காண முடியும். குறிப்பாக கடலூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் பகல் 12.10 மணிக்கும், நெய்வேலி, பகுதிகளில் பகல் 12.11 மணிக்கும் நிழல் இல்லாமல் இருக்கும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆர்.தாமோதரன் தெரிவித்தார். இதற்காக டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மையம் புதுவையில் நடத்திய பயிற்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன், ராமமூர்த்தி, வி.என்.சுப்பிர மணியன், அனுசியா, கார்த்திகேயன் ஆகி யோர் கலந்து கொண்டனர். அவர்கள் நிழலில்லா நாள் குறித்து கடலூர், புவன கிரி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தா சலம் ஆகிய பகுதிகளில் பள்ளி மாண வர்களுக்கு செயல் விளக்கம் அளிக்க உள்ளார்கள் என தெரிவித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணை செயலாளர் ஜெகதீசன் விருத்தாச்சலம் அருகில் உள்ள புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நிழல் இல்லா நாளை விளக்கிக் காட்டினார்.