கடலூர், ஏப். 10- கடலூர் மாவட்டம் தொழுதூரில் லட்சுமி மருத்துவமனை திறப்பு விழா திங்களன்று (ஏப். 10) நடைபெற்றது. நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா திங்களன்று (ஏப். 10) திறந்து வைத்தார். மருத்துவ அறையை பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பிரபாகரன் திறந்து வைத்தார். மருத்துவர் ஆலோசனை அறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் திறந்து வைத்தார். இதில் சிபிஎம் பெரம்ப லூர் மாவட்டச் செயலாளர் பெ.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோகுலகிருஷ்ணன், ஏ.கே.ராஜேந்திரன், நகரச் செயலாளர் சிவானந்தம், கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், திட்டக்குடி வட்டச் செயலா ளர், அன்பழகன், லேப்ராஸ் கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் சி.கருணாகரன், மகப்பேறு மற்றும் குழந்தை யின்மை சிகிச்சை மருத்து வர் எஸ்.டி.ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.