கடலூர், பிப். 8- கடலூர் மாவட்டத்தில் வெளியான இறுதி வேட்பா ளர் பட்டியலில் 437 இடங்க ளுக்கு 1,994 பேர் போட்டி யிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சி களில் உள்ள 447 இடங்க ளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத் தாக்கல் நடை பெற்றது. மொத்தம் 2,558 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில் 38 பேர் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றனர். போட்டியிட விரும்பாத வர்கள் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு திங்கட்கிழமை மாலை 3 மணி வரை அவகாசம் அளிக் கப்பட்டிருந்தது. அதன்படி, 21 உள்ளாட்சி அமைப்பு களில் 516 பேர் வேட்பு மனுவை திரும்பப் பெற்ற னர். இதில், 10 இடங்களில் போட்டியின்றி கவுன்சிலர் கள் தேர்வாகினர். இதனால், மீதமுள்ள 437 இடங்களுக்கு 1,994 பேர் போட்டியிடுவதாக அதிகா ரபூர்வமாக அறிவிக்கப் பட்டது. இதில், கடலூர் மாநக ராட்சியில் 64 பேர் தங்களது வேட்பு மனுவை திரும்பப் பெற்றதால் 45 வார்டுக ளில் 286 பேர் போட்டியிடு கின்றனர். நகராட்சிகளில் 180 வார்டுகளில் 2 வார்டுக ளில் போட்டியின்றி கவுன் சிலர்கள் தேர்வாகினர். இதனால், மீதமுள்ள 178 வார்டுகளில் 829 பேர் போட்டி யிடுகின்றனர். பேரூ ராட்சிகளில் 222 வார்டுகளில் 8 வார்டுகளில் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வாகி யுள்ளனர். இதனால் மீத முள்ள 214 வார்டுகளுக்கு 879 பேர் போட்டியிடுகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி யில் 26 பேர் மனுவை திரும்பப் பெற்றதால் 145 பேரும், பண்ருட்டி நகராட்சியில் 84 பேர் மனுவை திரும்பப் பெற்றதால் 171 பேரும், சிதம்பரம் நகராட்சியில் 41 மனுக்கள் திரும்பப் பெறப் பட்டதால் 125 பேரும், விருத்தாசலத்தில் 35 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதால் 143 பேரும், திட்டக்குடியில் 46 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதால் 124 பேரும், வடலூரில் 15 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதால் 121 பேரும் களத்தில் உள்ளனர். வடலூர் நகராட்சியில் 2 பேர் போட்டி யின்றி தேர்வாகினர். கிள்ளை பேரூராட்சியில் இரண்டு வார்டுகளிலும், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, மங்கலம் பேட்டை, பெண்ணாடம், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக ளில் தலா ஒருவரும் போட்டி யின்றி தேர்வாகி உள்ளனர்.