கடலூர்,மே 22- கடலூரில் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வது குறித்து அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூரில் நகர பேருந்து நிலையம் அமைப்பதற்கு அதிமுக ஆட்சிகாலத்தில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலு வலகம் அருகில் கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான இடத்தைப் தேர்வு செய்தனர். ஆனால் பணி கள் நடைபெறவில்லை. 2010 கடலூரில் எம்.புதூரில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது கடலூர் மாநகராட்சியாக மாற்றப்பட்ட பிறகு விழுப்புரம் நாகப் பட்டினம் தேசிய நெடுஞ்சாலை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி பேருந்து நிலையத்தை எம்.புதூர் அல்லது அரிசிபெரியாங்குப்பம் பகுதியில் அமைக்க மாவட்ட அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு நடத்தி யுள்ளனர். இது கடலூர் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய பஸ் நிலையம் அமைப்பது சம்பந்த மாக அனைத்து அரசியல் கட்சிகள், குடி யிருப்போர் அமைப்புகள், பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்டு மாவட்ட நிர்வாகம் ஒரு சரியான தீர்வுக்கு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் தற்போது உள்ள பேருந்து நிலையத்தை விரிவு படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சக்குப்பம், கடலூர் முது நகரிலிருந்து நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல அரசு விரைவு பேருந்துகள் கடலூரிலிருந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாநகர குழு வலியுறுத்தியுள்ளது.