districts

img

ஓசூர் துணை மேயரானார் ஆனந்தையா

ஓசூர், மார்ச் 7- ஓசூர் மாநகராட்சி மாமன்ற துணை மேயர் தேர்தலில் திமுக வின் ஆனந்தையா வெற்றி பெற்று  மாமன்ற முதல் துணை மேயராக பதவி ஏற்றார். ஓசூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர், துணை மேயருக்கான தேர்தலில் 7 ஆவது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் ஆனந்தையாவும் 42 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் ஜேபி என்ற ஜெயபிரகாசும் போட்டியிட்டனர். 45 வார்டு உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் திமுவின் ஆனந்தையா 25வாக்குகள் பெற்று 6 வாக்குகள் வித்யா சத்தில் துணை மேயராக வெற்றி பெற்றார். மாநக ராட்சி யின் முதல் துணை மேயராக பதவியேற்ற ஆனந்தையாவுக்கு ஆணையாளர், ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிராகாஷ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.