districts

img

ரேசன் கடை துவங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச.29- ஈரோடு கூலிவலசு பகுதியில் ரேசன் கடை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, வேம்பத்தி கிரா மத்தில் உள்ள கூலிவலசு பகுதியில் 300க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இப்பகுதி மக்கள் ரேசன் பொருள்களை வாங்க அருகாமை ஊரான ஓசைபட்டிக்கு செல்லவேண்டி அவல நிலை இருந்து வருகிறது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்ற னர். எனவே, கூலிவலசில் ரேசன்கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆ.புதுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டு றவு சங்கம் முன்பு கட்சியின் கிளைத் தலைவர் கே.குரு சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, தாலுகா செயலாளர் ஆர். முருகேசன், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஏ.முருகன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

;