districts

img

முன்பருவக்கல்வி முடித்த குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

இராமநாதபுரம், ஜூன் 7- தமிழக சமூக நலன்- மகளிர் உரிமைத் துறையில் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்க ளில் முன்பருவக்கல்வி முடித்த குழந்தை களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இராம நாதபுரம் கடலாடி வட்டாரத்தில் உள்ள ஆப்பனூர் அங்கன்வாடி மையத்தில் முன் பருவக்கல்வி முடித்த குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழாவும்,குருவாடி அங்கன் வாடி மையத்தில் குழந்தைகள் சேர்க்கை விழா நடைபெற்றது. 

கடலாடி வட்டார குழந்தை வளர்ச்சி  திட்ட அலுவலர் மா. சசிகலா. வட்டார  ஒருங்கிணைப்பாளர் மு.வெள்ளைப் பாண்டியன் ஆகியோர் பேசினர் .அனைத்து  குழந்தைகளுக்கும் பதக்கங்கள் அணி வித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கி பட்டங்  கள் வழங்கப்பட்டன. இதில் குழந்தை களின் பெற்றோர்கள், மேற்பார்வையா ளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.