districts

இந்த தேசத்தை மீட்பதற்கான தீர்ப்பை தமிழகத்திலிருந்து தொடங்குகிறோம்!

அரியலூர், ஏப்.20 - இந்த தேசத்தை மீட்பதற்கான தீர்ப்பை தமிழகத்திலிருந்து தொடங்கு கிறோம் என்றார் விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளருமான தொல்.திருமாவளவன். அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த அங்கனூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வெள்ளிக் கிழமை தனது தாயாருடன் வந்து வாக்க ளித்த அவர் பின்னர் செய்தியாளர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்த தேர்தல் 2 கட்சிகளுக்கு இடையே அல்லது இரண்டு அணிக ளுக்கு இடையே நடைபெறும் தேர்தல் அல்ல. ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், மற்றொருபுறம் இந்திய நாட்டுக்கு எதிராக உள்ள சங்பரிவார் அமைப்புகள் இடையே நடக்கும் தர்ம யுத்தம். இதில் நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணி செயல்படுகிறது.

அரசிய லமைப்புச் சட்டத்தை சிதைக்கக் கூடிய சங்பரிவார் அமைப்புகள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. ஜனநாயகத்தையும், அரசியல மைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியா கூட்டணி களத்தில் இருக்கிறது. நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் உள்ள இந்தியா கூட்டணி 40-க்கு 40  வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒருபுறம் கூட்டணி பலம், திமுக தலை மையிலான அரசு மூன்றாண்டில் செயல்படுத்திய திட்டங்கள், இந்தியா கூட்டணி நாட்டின் பாதுகாப்பு, ஜனநாயக பாதுகாப்பு என்ற கருத்தியல் பலம் ஆகிய மூன்றும் இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்கிறது. எனவேதான் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இந்த தேசத்தை மீட்பதற்கான தீர்ப்பை தமிழகத்திலிருந்து தொடங்குகிறோம் என்பதற்கான நாள்தான் இந்த வாக்குப் பதிவு. தமிழக மக்கள் இந்தியா கூட்டணி பக்கம் இருக்கிறார்கள்.

எனவே ஜனநாயகம் பாதுகாக்கப் படும், அரசியலமைப்பு சட்டம் பாதுகாக் கப்படும். தில்லியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி தூக்கி எறியப்படும். இந்தியா கூட்டணி ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை உள்ளது. தில்லியில் பாசிச பாஜக ஆட்சி மீண்டும் தொடர்ந்தால், பாஜக ஆளாத மாநிலங்கள் கலைக்கப் படும். அந்த நிலை தமிழகத்துக்கும் ஏற்படும். அப்பொழுது பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத்தொகை நிறுத்தப்படும்.

 இவ்வாறு அவர் கூறினார்.