அரியலூர், ஜூன் 11 - அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ரங்கராஜன் என்பவரது வயலில் உள்ள கிணற்றில் சாக்கு மூட்டை ஒன்று மிதப்பதாக அரியலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி சாக்கு மூட்டையை மீட்டு பார்த்தபோது உயிரி ழந்த பெண்ணின் சடலம் இருப்பது தெரிய வந்தது. உடனே கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்ணின் உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால், கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டு குறைந்தது ஒரு மாதம் இருக்கும் என போலீசார் விசார ணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில், அப்பெண்ணின் நெருங்கிய தோழியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண் தஞ்சாவூர் வடக்கு வாசல் தெருவை சேர்ந்த வசந்தி என்பது தெரியவந்தது. இச்சம்பவத்தில் தொடர் புடைய உயிரிழந்த வசந்தியும், அருங்கால் கிராமத்தை சேர்ந்த மாரியாயி மற்றும் செல்வி ஆகியோர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதில், பணத்தை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில், மாரியாயி, செல்வி ஆகியோர் சேர்ந்து வசந்தியை கொலை செய்து கிணற்றில் வீசியதாக காவல்துறை விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.