districts

img

பொது வேலைநிறுத்த வாயிற் கூட்டம்

அரியலூர், மார்ச் 24 - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஜெயங்கொண்டம் கிளை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைமையில் அனைத்து கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் மார்ச் 28, 29 அகில இந்திய பொது வேலை நிறுத்த வாயிற்கூட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்றது.  தொமுச மாவட்ட கவுன்சில் துணைத் தலைவர் சம்மந்தம் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்ட தலைவர் தனசிங் முன்னிலை வகித்தார். தொமுச கிளை செயலா ளர் சேகர் வரவேற்றார். கிளைத் தலைவர் கொளஞ்சி, பொருளாளர் செல்வம், சிஐடியு கிளைச் செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட் டோர் சிறப்புரையாற்றினர். இறுதியில் தொமுச கிளை துணைத் தலைவர் சுப்பிரமணி யன் நன்றி கூறினார்.