districts

img

அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடப் பணி தொடக்கம்

அரியலூர், மார்ச் 1- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடத்துத்திற்கான கட்டுமானப் பணிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ஜெயங்கொண்டத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பொதுப் பணித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர், கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தார். நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி,  ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.