அரியலூர், டிச.12- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சர்வணிகா (7) டிசம்பர் 3 முதல் 11-ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெற்ற 16-ஆவது ஆசிய சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். 7 வயதுக்கு உட்பட்டோ ருக்கிடையே நடைபெற்ற மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்று 3 தங்கப் பதக்கங் களை வென்றுள்ளார். இதன் மூலம் மூன்று பிரிவுகளில் நடைபெற்ற 23 ஆட்டங்களி லும் முழுமையாக வெற்றி பெற்று, ஆசிய அளவில் புதிய சாதனை படைத்து இந்தியா விற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஆசிய சதுரங்க போட்டி யில் தங்கப் பதக்கங்களை வென்ற சர்வணிகா திங்க ளன்று அரியலூர் வந்தடைந் தார். அவருக்கு பொதுமக் கள் மற்றும் விளையாட்டு துறை சார்பில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. இத னையடுத்து அவரது சொந்த கிராமமான உடையார் பாளையத்தில் பொதுமக் கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.