court

img

முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு சம்மன்...

சென்னை:
நீதிபதிகளின் மனைவிகள் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதிக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ் கர் ணன் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மனைவிகள் பற்றி ஆபாசமாக பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருந்தன.இதனால் நீதிபதிகளின் மனைவிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய கர்ணன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி தில்லி தமிழ் வழக்கறிஞர்கள் அசோசியேசன் சார்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஆன்லைன் மூலம் புகாரளிக்கப்பட்டது.இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் நீதிபதி கர்ணன் மீது கலகத்தை தூண்டுதல், பெண்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசுதல், உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் வழக்குப்பதிவு செய் யப்பட்ட கர்ணனை விசாரிப்பதற்காக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.

;