court

img

மூலப்பொருட்களை விற்க நீதிமன்றத்தை நாடியது ஸ்டெர்லைட்....

மதுரை:
தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தொழிற்சாலை மூலப்பொருட்கள் உள்ளிட்ட மற்ற பொருட்களை வெளியே கொண்டு வர அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தூத்துக்குடி தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட்நிறுவனம் அனைத்து அனுமதியும் பெற்று தொடங்கப் பட்டது.மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தை முடியது. தமிழக அரசு ஆணை 72- இன் படி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் முழுவதுமாக மூடப்பட்டது.வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அவசரகாலத்தில் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. நிறுவனத்தின் உள்ளே ஆசிட், ரசாயனம் மற்றும் பல மூலப் பொருள்கள் உள்ளது. அவசர கால நிலைக்கு குறைந்த அளவு மின்சாரம் வழங்கக் கோரி மனு அளித்தும் அது நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து நிறுவனத்தின் உள்ளே உள்ள மூலப்பொருள்களை ஆய்வு செய்ய தமிழக அரசு அரசாணை எண் 83-ன் படி உள்ளூர் உயர்மட்ட குழு அமைத்து உத்தரவிட்டது.இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் போது 2132.64 மெட்ரிக் டன் திரவ நிலை ஆக்சிஜன் மற்றும் 7833 மெட்ரிக் கியூபிக் கேஸ் மருத்துவ ஆக்சிஜன் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது. இதற்காக உள்ளூர் உயர்மட்ட குழு அனுமதி பெற்று 250 ஊழியர்கள் வேலைபார்த்தனர்.தற்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணையை வெளியேற்றவும் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை சரி செய்ய உள்ளூர் உயர்மட்டக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்டது.ஆக்சிஜன் தயாரிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய், மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்ற இடைக்காலத் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.  அதேபோல் தொழிற்சாலையில் முன்பு இருந்த மூலப்பொருட்கள் மற்றும் பொருட்கள், கழிவுகள் ஆகியவைவெளியே கொண்டு வர அனுமதி அளிக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைச்சாமி, ஆனந்தி அமர்வுமுன்பு புதனன்று  விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில்ரூ.200 கோடிக்கு மேல் மதிப்புள்ள மூலப்பொருட்கள் தொழிற்சாலை உள்ளே உள்ளது; அதை எடுத்து விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் இது தொடர்பான வழக்கு வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.மனுதாரர் தரப்பில் அவ்வாறு எந்த ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;