வயநாடு இடைத்தேர்தல்: நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்..!
அவதூறு வழக்கில் பெற்ற 2 ஆண்டு சிறைத்தண்டனை காரண மாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை இழந்து விட்டதாகவும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வயநாடு மக்கள வைத் தொகுதி தற்போது காலியாக இருப்பதாகவும் நாடாளுமன்ற மக்க ளவை செயலகம் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதனால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலோடு சேர்த்து, வயநாடு மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று யூகங்கள் வெளியாகி வந்தன. ஆனால், கர்நாடக சட்டப்பேரவைக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னணியில், வயநாடு தொகுதி யின் நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசம் 6 மாதங்களாகும். ராகுல் காந்தி க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த கீழ் நீதிமன்றம், அத்தண்டனையை மேல்முறையீட்டுக்காக நிறுத்தி வைத்துள்ளது. எனவே, நாங்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
புதுதில்லி, மார்ச் 29 - கர்நாடக சட்டப் பேரவைக்கு, மே 10-இல் ஒரே கட்டமாக தேர்தல் அறி விக்கப்பட்டு உள்ளது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் பி. ராஜீவ் குமார், புத னன்று தில்லியில் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறி விப்பை வெளியிட்ட அவர், கர்நாட கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அம லுக்கு வருகின்றன; தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 13 துவங்கி ஏப்ரல் 20 வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்; ஏப்ரல் 21 அன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்; மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 24 கடைசி நாளாகும்; அதைத்தொடர்ந்து மே 10 அன்று வாக்குப் பதிவு நடத்தப்பட்டு, மே 13 அன்று முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் பி. ராஜீவ் குமார் மேலும் கூறியதாவது:
173 பொதுத்தொகுதிகள், 36 தனித் தொகுதிகள், 15 பழங்குடியினர் தொகுதிகள் என கர்நாடகத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள் ளன. இந்நிலையில், கர்நாடக சட்டப் பேரவை பதவிக்காலம் மே 24-ஆம் தேதியுடன் முடிவடைவதையொட்டி, மே 10 அன்று தேர்தல் நடைபெறு கிறது. இதில், 2 கோடியே 62 லட்சம் பேர் ஆண் வாக்காளர்கள், 2 கோடியே 59 லட்சம் பேர் பெண் வாக்கா ளர்கள் என மொத்தம் 5 கோடியே 21 லட்சத்து 73 ஆயிரத்து 579 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக மொத்தம் 58 ஆயிரத்து 282 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 1320 வாக்குச் சாவடிகளில் முழுக்க முழுக்கப் பெண்களும், 100 வாக்குச் சாவடிகளில் மாற்றுத் திறனாளி களும் மட்டுமே தேர்தல் அலுவலர் களாக செயல்பட உள்ளனர். கர்நாடக வாக்காளர்களில் 12 லட்சத்து 15 ஆயிரம் வாக்காளர்கள் 80 வயதைக் கடந்தவர்களாகவும், 16 ஆயிரத்து 976 வாக்காளர்கள் நூறு வயதைக் கடந்தவர்களாகவும், 5.55 லட்சம் பேர் மாற்றுத் திறனாளி களாகவும் உள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகளும் முதியவர் களும் முதன்முறையாக வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பதற்குத் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
2023 ஏப்ரல் 1-ஆம் தேதியோடு 18 வயது பூர்த்தியடைவோரும் வாக் களிக்க வழிவகை செய்யப்பட்டுள் ளது. கடந்த தேர்தலோடு ஒப்பிடு கையில் 9.17 லட்சம் புதிய வாக்கா ளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையர் பி. ராஜீவ் குமார் தெரி வித்துள்ளார். தென்மாநிலங்களில் பாஜக முதன்முதலாக ஆட்சிக்கு வந்த மாநிலம் கர்நாடகம் ஆகும். கடந்த 2018-ஆம் ஆண்டிலும், தேர்தல் நடை பெற்ற 222 தொகுதிகளில் பாஜக 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. காங்கிரஸ் கட்சி 80 இடங்களிலும், குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வென்றன. எனினும் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் அழைத்தார் என்று கூறி பாஜக தலை வர் எடியூரப்பா முதல்வராக பதவி யேற்றுக் கொண்டார். ஆனால், பெரும் பான்மையை நிரூபிக்க முடியாமல் 3 நாட்களிலேயே ராஜினாமா செய்து விட்டு வெளியேறினார். அதன்பின் னர், காங்கிரஸ் ஆதரவுடன் குமார சாமி முதல்வரானார். இந்த ஆட்சி ஓராண்டு கடந்த நிலையில், காங் கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்ஏ-க்களை குதிரைபேரம் மூலம் தமக்கு ஆதரவாக வளைத்த பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. தற்போது 2023 தேர்தலி லும் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்து விட வேண்டும் என்று பகீரத முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆனால், பெரும்பாலான கருத்துக் கணிப்புக்கள் பாஜக-வுக்கு எதி ராகவே உள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.