court

img

10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுதில்லி, நவ. 7 உயர்சாதியில் உள்ள ஏழை களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் வகையில், ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த ‘103-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்- 2019’ செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், திங்களன்று தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.  அதன்படி வழங்கப்பட்ட தீர்ப்பில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித், ஜே. ரவீந்திர பட் ஆகிய 2 நீதிபதிகள், 103-ஆவது அரசிய லமைப்புத் திருத்தம் சட்ட விரோத மானது என்றும், அதேநேரம் ஜே. தினேஷ் மகேஸ்வரி, ஜே. பேலா திரி வேதி, ஜே.பி. பர்திவாலா ஆகிய 3  நீதிபதிகள், 103-ஆவது சட்டத்திரு த்தம் செல்லும் என்றும் இருவேறு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

எனினும், 3:2 என்ற விகிதத்தின் அடிப்படையில் 103-ஆவது அரசிய லமைப்புத் திருத்தம் செல்லும் என்ற பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஒன்றிய பாஜக அரசானது, கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்ன தாக அரசியலமைப்பில் 103-ஆவது திருத்தத்தை கொண்டுவந்து அதனை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றியது. இந்த திருத்தத்தின் மூலம், இதுவரை இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் வராத உயர்சாதி ஏழை களுக்கு(EWS) கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏதுவாக, அரசியலமைப்பின் பிரிவுகள் 15  மற்றும் 16-இல் பிரிவு (6) சேர்க்கப்  பட்டது; புதிதாகச் சேர்க்கப்பட்ட பிரிவு 15(6) மூலம் உயர்சாதி ஏழை களுக்கு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடு களை செய்ய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது; சட்டப்பிரிவு 30(1)-இன் படி, சிறுபான்மை கல்வி நிறுவனங்களைத் தவிர, பிற அரசு உதவி பெறும் அல்லது உதவி பெறாத தனியார் நிறுவனங்கள் உட்பட அனை த்துக் கல்வி நிறுவனத்திலும் உயர் சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து, இதற்கான இட ஒதுக்கீட்டின் வரம்பை பத்து சத விகிதமாக நிர்ணயம் செய்தது; மேலும், இது ஏற்கெனவே நடைமுறை யிலுள்ள பட்டியல் வகுப்பினர்- பழங்கு டியினர் மற்றும் இதர பிற்படுத்தப் பட்டோருக்கான 49.5 சதவிகித இடஒதுக்கீடு அளவோடு கூடுதலாக இருக்கும் என்றும் கூறியது.

இது அரசிலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறும் வகையில் உள்ளது. இடஒதுக்கீட்டின் நோக்கங்களுக்கு எதிரானது மற்றும் சட்டவிரோதமானது என்று யூத் பார் ஈகுவாலிட்டி உள்ளிட்ட அமைப்புக்கள் சார்பில் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. தமிழ்நாடு, கேரளா, மகா ராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தரப்பில் வாத, பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தேவும், திமுக சார்பில் வழக்கறிஞர் பி. வில்சன் உள்ளிட்டோரும் பொருளா தார ரீதியில் இட ஒதுக்கீடு தரும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து வாதங் களை வைத்தனர்.  இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டம். பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்தை வலி யுறுத்தும் அரசியலமைப்புச் சட்ட பிரிவு 14-க்கு எதிரான அநீதி. பொரு ளாதார அளவுகோல் என்பது இட ஒதுக்கீடு வகைப்படுத்தலுக்கு அடிப்படையாக இருக்க முடியாது. இந்த இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த முடிவு செய்தால் உச்ச நீதிமன்றம் இந்திரா சஹானி (மண்டல்) தீர்ப்பை  மறுபரிசீலனை செய்ய வேண்டி யிருக்கும்.

குறிப்பிட்ட நபர் பின்தங்கிய வரா என்பதை சாதியின் அடிப் படையில்தான் தீர்மானிக்க வேண்டும்  என்பதை உச்சநீதிமன்றம் கடந்த 1992-ஆம் ஆண்டு, இந்திரா - சஹானி வழக்கில் உறுதி செய்துள்ளது. 9 நீதிபதிகள் அடங்கிய இந்திரா - சஹானி வழக்கில் மட்டுமல்லாமல், அசோக் குமார் தாக்குர் வழக்கிலும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது, அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கூறு களுக்கு எதிரானது என கூறப்பட்டுள் ளது. 10 சதவிகிதம் என்ற இடஒதுக்கீடு வரம்பு நிர்ணயிக்கப்பட்டதும் கூட,  வருமான அளவுகோலை வரை யறை செய்ய அமைக்கப்பட்ட சின்ஹா  கமிஷனின் அடிப்படைக்கு எதி ரானது என்று வாதங்கள் வைக்கப் பட்டன. ஏழைகள் என்பதற்கு ஆண்டு  வருமானம் ரூ. 8 லட்சம் வரை உள்ள வர்கள், 5 ஏக்கர் விவசாய நிலமும் 1,000 சதுர அடிக்கு குறைவான வீடு அல்லது பிளாட்டை கொண்டவர்கள் என்று எதன் அடிப்படையில் வரை யறை ஏற்படுத்தப்பட்டது? என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஒன்றிய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணு கோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி னர். அவர்கள், 10 சதவிகித இட ஒதுக்கீடு மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க உதவும் வகை யிலேயே கொண்டுவரப்பட்டு உள்ளது. அரசியலமைப்பின் கொள்கை களையோ அல்லது முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவு களையோ மீறவில்லை என்று கூறி னர். 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஏற்கெ னவே உள்ள 50 சதவிகித இட ஒதுக்கீடு முறையை தாண்டி வழங்கப்படுவது அல்ல. இது தனிப்பட்ட ஒதுக்கீடு என்று விளக்க மளித்தனர். இதற்காக கல்வி நிறுவனங்க ளில் 25 சதவிகித இடங்களை அதிகரித்தி ருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் கடந்த செப்டம்பரில் ஆறரை நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அனைத்துத் தரப்பு வாதங்க ளும் நிறைவடைந்த நிலையில், கடந்த செப்  டம்பர் 27-இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. பொருளாதாரத்தை அடிப்ப டையாக கொண்டு இட ஒதுக்கீடு வழங்கி யிருப்பதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்  படை கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளதா? என்  பது போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தீர்ப்பு அமையும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் தலைமை நீதிபதி யு.யு.  லலித் தலைமையில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ். ரவீந்திர பட், பேலா எம். திரி வேதி, ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்  கிய அரசியல் சாசன அமர்வு திங்களன்று தீர்ப்பளித்தது. அதில்தான், உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் 103- ஆவது அரசியலமைப்புத் திருத்தம் செல்  லும் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம். திரிவேதி, ஜே.பி. பர்திவாலாவும், 103-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சட்டவிரோதமானது என்று தலைமை நீதி பதி யு.யு. லலித், எஸ். ரவீந்திர பட் ஆகியோ ரும் தீர்ப்பளித்துள்ளனர். பெரும்பான்மை அடிப்படையில் 3 நீதிபதிகள் வழங்கிய, 10 சத விகித இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பே  உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆபத்தான பரிந்துரை

10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று  தீர்ப்பளித்துள்ள நீதிபதிகளில் ஒருவரான பேலா திரிவேதி, “சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டையே மறு ஆய்வு செய்ய  வேண்டும்” என்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடம்  ஆகிவிட்டது. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு ஒரு கால அளவை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது என் கருத்து. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை தனி பிரிவாக கருதுவது நல்லதுதான். சமத்  துவம் இல்லாத இடத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தவே இடஒதுக்கீடு. இந்த இடஒதுக்  கீடு காரணமாக தனியாக பொருளாதார ரீதி யாக பின்தங்கியவர்கள் என்ற பிரிவு உரு வாகிறது. அதனால் அதில் மற்ற சாதிப் பிரி வினரை சேர்க்க வேண்டும் என்று கூற முடி யாது. பொருளாதார ரீதியாக உருவாக்கப் படும் பிரிவே தனிப் பிரிவுதான். இதில் மற்ற  சாதிகளை சேர்ப்பது அவசியமற்றது. சாதி  ரீதியாக எங்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்  கப்படுகிறதோ அங்கெல்லாம் அதற்கு என்று  ஒரு காலக்கெடு இருக்க வேண்டும். சாதி இட ஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய  வேண்டும். இத்தனை ஆண்டுகளுக்கு பின்  இடஒதுக்கீடு கிடையாது என்று காலக்கெடு  விதிக்க வேண்டும்” என்று நீதிபதி பேலா திரி வேதி கூறியுள்ளார்.

“சாதிய இடஒதுக்கீடு என்பது நீண்ட  காலத்திற்கு நீடித்துக்கொண்டே இருக்கக்  கூடாது. காலம் முழுமைக்கும் அந்த இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது. பொருளாதார இடஒதுக்கீடு தவறானது, நியாயமற்றது என்று கூற முடியாது. ஆனால் இடஒதுக்கீடு தான் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கடைசி இடம் என்றும் கூற முடி யாது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக் காக இதை பயன்படுத்தக் கூடாது. 10 சத விகித இடஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மீறுவதாக இல்லை. இந்த இடஒதுக்கீட்டில் குறிப்பிட்ட பிரிவினரை சேர்த்து மற்றவர் களை விடுவித்தது விதிமீறல் இல்லை” என்று நீதிபதி ஜே.பி. பர்திவாலா கூறியுள்ளார். நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தனது தீர்ப்  பில், “மொத்தம் 3 விஷயங்களை நாம் இதில் ஆராய வேண்டும். இந்த இடஒதுக்கீடு ஜாதி  ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக உள்  ளதா என்று பார்க்க வேண்டும். சமத்துவத் திற்கு எதிராக இது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 50 சதவிகிதத்திற்குள் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற கட்டுப் பாட்டை இந்த 10 சதவிகித இடஒதுக்கீடு மீறு கிறதா என்று பார்க்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இல்லை. இதை வைத்து பார்க்கையில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு செல்லும்” என்று தனது தீர்ப்பில்  குறிப்பிட்டுள்ளார். மேலும், “பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை. 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற கட்டுப்  பாட்டை மீறுவது தவறில்லை. 50 சதவிகி தம் இடஒதுக்கீடு வரம்பு என்பது கட்டாயம் அல்ல” எனவும் தெரிவித்துள்ளார்.

நீதிபதி ரவீந்திர பட் கருத்து 

உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியல மைப்புத் திருத்தம் சட்டவிரோதமானது என்று கூறியுள்ள நீதிபதி ரவீந்திர பட், தனது  தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாவது: பொருளாதார அளவுகோல்களின் அடிப்  படையில் இடஒதுக்கீடு அளித்திருப்பது விதி மீறல் இல்லை. ஆனால், அரசியலமைப்பு 103-வது திருத்தச் சட்டத்தின் பிரிவு 2 மற்றும் 3 ஆகியவை அரசியலமைப்பிற்கு முரணா னவை. அவை அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக உள்ளன. எனவே அவை செல் லாது. 15(6) மற்றும் 16(6) பிரிவுகள் பாரபட்ச மானதாகவும், சமத்துவக் குறியீட்டை மீறு வதாகவும் உள்ளன. இந்திய அரசியல மைப்பு சட்டத்தில் பாகுபாட்டிற்கு இட மில்லை. எவர் ஒருவரையும் தவிர்ப்பதற்கு,  நம் அரசியலமைப்புச் சட்டம் அனும திப்பதில்லை. ஆனால், சமூக நீதிக் கட்ட மைப்பையும் அரசியலமைப்பின் அடிப்ப டையையும், இந்த 10 சதவிகித இட ஒதுக் கீட்டு சட்டத் திருத்தம் பலவீனமாக்குகிறது.  ஏழைகளில் பெரும்பாலோர், 15(4) மற்றும் 16(4) ஆகிய பிரிவுகளில் குறிப்பி டப்பட்டுள்ள பட்டியல் வகுப்பினர், பழங்குடி யினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னரே ஆவார்கள். ஆனால், அவர்கள் இந்த  இடஒதுக்கீட்டில் புறக்கணிக்கப்பட்டு உள்ள னர். இவர்கள் இடஒதுக்கீடு பலன்களைப் பெற்று சிறப்பாக இருக்கிறார்கள் என்று நம்பும்படி இந்தத் சட்டத் திருத்தம் நம்மை  ஏமாற்றுகிறது. இடஒதுக்கீட்டை சலுகை யாக கருதக்கூடாது. அது சமூகத்தில் பிற்  படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கும் இழப்பீடு. ஆனால், பிற்படுத்தப்பட்ட மற்றும்  பட்டியல் வகுப்பு மக்களை 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைப்ப தன் மூலம் இந்த சட்டத் திருத்தம் ஏற்றத்  தாழ்வுகளைக் கடைப்பிடிக்கிறது. இந்த இட ஒதுக்கீடு சமத்துவத்தின் ஆணி வேரை அசைத்து பார்த்துள்ளது. அரசியலமைப்பு சட்ட பிரிவு 16(1) மற்றும் (4) ஆகியவை ஒரே  சமத்துவக் கொள்கையின் அம்சங்கள் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.

இவ்வாறு கூறியுள்ள நீதிபதி ரவீந்திர  பட், “தன்னுடைய மதம் மட்டும் பிழைக்க  வேண்டும் என்றும் மற்றவர்களின் மதம்  அழிய வேண்டும் என கனவு காண்பவர்களை கண்டு பரிதாபப்படுகிறேன்” என்று 1893-இல், சுவாமி விவேகானந்தர் சகோதரத்து வம் பற்றி சிகாகோவில் ஆற்றிய உரை யையும் மேற்கோள் காட்டியுள்ளார். நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு வழங்கிய தைத் தொடர்ந்து, தனது தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி யு.யு. லலித், “நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்புடன் ஒத்துப்போகிறேன், இந்த சட்டத் திருத்தம் செல்லாது என்பதே எனது தீர்ப்பு” என்று குறிப்பிட்டார்.